முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.கில் மசூதி இடிந்து 24 பேர் பரிதாப சாவு

புதன்கிழமை, 10 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

லாகூர், செப்.11 - பாகிஸ்தானின் லாகூர் நகரில் மசூதி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் 24 பேர் பலியாகினர் 10 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலம் லாகூரின் தரோகவாலா பகுதியில் மசூதி உள்ளது. 2 மாடிகளுடன் கூடிய இந்த மசூதியில் பிரார்த்தனை நடத்துவதற்காக நேற்று முன் தினம் 40-க்கும் மேற்பட்ட முல்லிம்கள் திரண்டனர். பிரார்த்தனை தொடங்கிய சிறிது நேரத்தில், திடீரென மசூதி கட்டிடம் இடிந்து விழுந்தது. மசூதிக்குள் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.

கட்டிடம் இடிந்து விழுந்த போது, குண்டு வெடித்தது போல பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் அதிர்ச்சியுடன் ஓடிவந்தனர். உடனடியாக போலீஸ் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளில் இறங்கினர்.

இந்த விபத்தில், மசூதிக்குள் இருந்த 24 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. இடிபாடுகளில் இருந்து 10 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்