முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போரில் பொட்டு அம்மான் கொல்லப்பட்டார்: இலங்கை

வெள்ளிக்கிழமை, 12 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, செப் 13:

விடுதலைப்புலி உளவுத்துறை தலைவர் பொட்டு அம்மான் கைது செய்யப்படவில்லை. ஈழத்தில் நடந்த போரில் கொல்லப்பட்டார் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் உளவுத்துறை தலைவராக இருந்தவர் பொட்டு அம்மான். இவர் கடந்த 9ம் தேதி ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டதாக ஒரு தமிழ் இணையதளத்தில் செய்தி வெளியானது. கனடாவில் தங்கியிருக்கும் மனைவி மற்றும் குடும்பத்தினரை சந்திக்க புறப்பட்ட போது பிடிபட்டார். விசாரணைக்காக அவரை விரைவில் இலங்கை கொண்டு செல்ல இருப்பதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. இந்த செய்தியை இலங்கை அரசு மறுத்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு வனாளி பகுதியில் நடந்த ஈழ போரில் அவர் கொல்லப்பட்டார் என்று இலங்கை ராணுவ தலைமை அலுவலக ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதில் கடந்த 2009ம் ஆண்டு வன்னியில் நடந்த போரில் பொட்டு அம்மான் உயிரிழந்தார். அப்போது அங்கு ஜெனரல் ஜகத் ஜெயசூர்யா கமாண்டராக இருந்தார். எனவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மையல்ல. மேலும் வெளிநாடுகளில் வாழும் விடுதலைப்புலிகள் இது போன்ற தகவலை பரப்பி வருகின்றனர். அவர்கள் இன்னும் முழுமையாக ஒடுக்கப்படவில்லை. வெளிநாடுகளில் தங்கள் இயக்கத்துக்கு நிதி திரட்டி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago