முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனை அழிக்கப் பார்க்கிறார் புதின்: உக்ரைன் பிரதமர்

ஞாயிற்றுக்கிழமை, 14 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

கீவ்கெப், செப் 15:

உக்ரைன் நாட்டை அழிக்கப் பார்க்கிறார் ரஷ்ய அதிபர் புதின் என்று உக்ரைன் பிரதமர் அர்செனில் யாட் சென்யுத் குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் உக்ரைன் தலைநகர் கீவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசியதாவது, ரஷ்ய அதிபர் புதின் உக்ரைனுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள விரும்பவில்லை. மாறாக உக்ரைனை அவர் அழிக்க துடிக்கிறார். டொனெட்ஸ்க், லுகன்ஸ்க் நகரங்களை பிடிப்பது மட்டுமல்ல, புதினின் நோக்கம். அவரது முக்கிய நோக்கமே உக்ரைன் முழுவதையும் பிடிப்பது தான். தனி நாடாக இருக்கும் உக்ரைனை அழிக்க வேண்டும் என்றும் புதின் விரும்புகிறார். கிழக்கு உக்ரைனில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்துவதற்குத்தான் நான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன் என்று பிரதமர் கெனில் பாட்சென்யுக் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்