முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவை எளிதில் நம்பக்கூடாது: காங்.. எச்சரிக்கை

புதன்கிழமை, 17 செப்டம்பர் 2014      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.18- சீனாவை மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டுமென்று மோடி அரசுக்கு காங்கிரஸ் அறிவுரை கூறியுள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று இந்தியாவுக்கு வந்துள்ளார். இந்தியா-சீனா இடையே நேற்றே 3 முக்கிய ஒப்பந்தங்கள் ஏற்பட்டன இந்த நிலையில் காங்கிரஸ் மேற்கண்டவாறு கூறியுள்ளது.

இது தொடர்பாக குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் சங்கர் சிங் வகேலா கூறியிருப்பதாவது:- சீனா விஷயத்தில் இந்தியா எப்போதும் தனது கடந்த கால கசப்பான அனு பவங்களை மறந்துவிடக் கூடாது. நேரு காலம் முதல் வாஜ்பாய் வரை சீனா நம்மிடம் மோசமாகவே நடந்து கொண்டுள்ளது. அவர்களை நாம் எளிதில் நம்பிவிடக் கூடாது. பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்தா லும், அவர்களை மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்