எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்சியான், செப்.20 - 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி தென் கொரியாவின் இன்சியான் நகரில் நேற்று தொடங்கியது. 16 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டி அக்டோபர் 4-ம் தேதி நிறைவடைகிறது.
இந்தப் போட்டி 3-வது முறையாக தென் கொரியாவில் நடைபெறுகிறது. இதற்கு முன்னர் 1986 (சியோல்), 2002 (புசான்) ஆகிய ஆண்டுகளில் ஆசிய விளையாட்டுப் போட்டியை தென் கொரியா நடத்தியிருக்கிறது. ஆசிய கண்டத்தில் உள்ள இந்தியா, சீனா, ஜப்பான், வடகொரியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 45 நாடுகளைச் சேர்ந்த 13 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் உள்பட மொத்தம் 20 ஆயிரம் பேர் இதில் பங்கேற்கிறார்கள். 36 வகையான விளையாட்டுகளில் 439 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ள ன. இதில் 28 வகையான விளையாட்டுகள் 2016-ல் நடைபெறவுள்ள ரியோ ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறுகின்றன.
மொத்தம் 49 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் 23 மைதானங்கள் புதிதாக கட்டப்பட்டவையாகும். இதுதவிர வீரர்களின் பயிற்சிக்காக 54 பயிற்சி மைதானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. விளையாட்டு கிராமத்தில் வீரர்கள், அதிகாரிகள், செய்தியாளர்கள் ஆகியோருக்காக 9,500 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்சியானில் அமைக்கப்பட்டுள்ள பிரதான மைதானத்தில் 61 ஆயிரத்து 74 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குதான் தொடக்க விழா நடைபெற்றது. இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடக்க விழா நடைபெற்றது. முதல் நாளில் எந்தப் போட்டியும் கிடையாது. இன்று முதல் போட்டிகள் ஆரம்பமாகின்றன. ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான மைதானங்கள், உள்கட்டமைப்பு வசதிகள், கட்டிடங்கள், சாலைகள் உள்ளிட்டவற்றுக்காக உத்தேசமாக ரூ.9870 கோடி செலவிடப்பட்டுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் அசைக்க முடியாத அணியாக சீனா திகழ்கிறது. ஆசிய விளையாட்டின் வரலாற்றில் அனைத்து போட்டிகளிலும் சேர்த்து அதிக பதக்கங்கள் வென்ற அணிகள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் சீனா இதுவரை 1,191 தங்கம், 792 வெள்ளி, 570 வெண்கலம் என மொத்தம் 2,553 பதக்கங்களை வென்றுள்ளது.
ஜப்பான் 2,650 பதக்கங்களுடனும், தென் கொயா 1,829 பதக்கங்களுடனும் முறையே 2 மற்றும் 3-வது இடங்களில் உள்ளன. கடந்த முறை 199 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்த சீனா இந்த முறையும் அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2-வது இடத்தை ஜப்பானும், 3-வது இடத்தையும் தென் கொரியாவும் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா முதல் 7 இடங்களுக்குள் வரலாம் என தெரிகிறது.
இந்தியாவில் இருந்து 679 பேர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இதில் 516 பேர் வீரர், வீராங்கனைகள். எஞ்சியவர்கள் பயிற்சியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆவர். நீச்சல், வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், கூடைப்பந்து, குத்துச்சண்டை, படகுப் போட்டி, சைக்கிளிங், குதி ரையேற்றம், கால்பந்து, கோல்ஃப், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹேண்ட்பால், ஹாக்கி, ஜூடோ, கபடி, செபக்தாக்ரா, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், டேக்வாண்டோ, டேபிள் டென்னிஸ், டென்னிஸ், வாலிபால், மல்யுத்தம், ஊஷூ, பளுதூக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
கடந்த ஜூலை-ஆகஸ்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 15 தங்கம் உள்பட 64 பதக்கங்களைக் குவித்த இந்தியா, ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் சிறப்பாக செயல்படும் முனைப்பில் உள்ளது. ஆசிய கண்டத்தில் விளையாட்டுத் துறையில் கோலோச்சி வரும் சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளின் சவால்களை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல. கடந்த முறையைவிட இந்த முறை இந்தியா கூடுதல் பதக்கங்களை வெல்லும் என இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) நம்பிக்கை தெரிவித்துள்ளது. "காமன்வெல்த் போட்டியில் 64 பதக்கங்களை வென்றதன் மூலம் இந்தியாவின் செயல்பாடு திருப்திகரமாக அமைந்தது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் 70 பதக்கங்கள் வரை இந்தியர்கள் வெல்வார்கள் என நம்புகிறோம்" என சாய் இயக்குநர் ஜி.ஜி.தாம்சன் தெரிவித்துள்ளார்.
பாட்மிண்டன், ஸ்குவாஷ் போட்டிகளில் சில பதக்கங்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குத்துச்சண்டை, மல்யுத்தம், கபடி ஆகியவற்றில் இந்த முறையும் இந்தியர்கள் பதக்கங்களைக் குவிப்பார்கள் என நம்பப்படுகிறது. கபடியில் தொடர்ச்சியாக 6 முறை தங்கம் வென்றுள்ள இந்திய ஆடவர் அணி, இந்த முறையும் தங்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் மகளிர் அணிக்கும் நல்ல வாய்ப்புள்ளது. இதுதவிர டென்னிஸிலும் பதக்க வாய்ப்புள்ளது.
ஹாக்கி போட்டியைப் பொறுத்தவரையில் 1988-க்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்லவில்லை. இந்தமுறை அந்த குறையைத் தீர்க்கும் முனைப்பில் உள்ளது சர்தார் சிங் தலைமையிலான இந்திய அணி. தங்கப் பதக்கம் வெல்லும் பட்சத்தில் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடித் தகுதி பெற்றுவிடலாம்.
ஆடவர் வட்டு எறிதலில் விகாஸ் கௌடாவுக்கு பதக்க வாய்ப்புள்ளது. காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கௌடா, இதுவரை ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றதில்லை. எனவே அவர் இந்த முறை அந்த குறையைத் தீர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் வட்டு எறிதலில் கிருஷ்ணா பூனியா, சீமா பூனியா ஆகியோருக்கு நல்ல வாய்ப்புள்ளது. இவர்களில் சீமா பூனியா, காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடவர் 110 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் சித்தார்த் திங்காளயா பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது. அவர் கடந்த மாதம் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை போட்டியில் முதலிடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கி சுடுதலைப் பொறுத்தவரையில் அபிநவ் பிந்த்ரா, ககன் நரங் ஆகியோர் கடந்த முறை நழுவவிட்ட தங்கப் பதக்கத்தை இந்த முறை வெல்லும் முனைப்பில் உள்ளனர். ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப், காமன்வெல்த் ஆகியவற்றில் பதக்கம் வென்றுவிட்ட பிந்த்ரா, ஆசிய விளையாட்டுப் போட்டி யில் தனிநபர் பிரிவில் ஒரு பதக்கம்கூட வென்றதில்லை. அவ ருக்கு இதுவே கடைசி ஆசிய விளையாட்டுப் போட்டியாக இருக்கலாம் என்பதால் அவர் தங்கம் வெல்ல முயற்சிப்பார்.
ஜிது ராய் (50 மீ. பிஸ்டல்), அபூர்வி சான்டீலா (மகளிர் 10 மீ. ஏர் ரைபிள்), மலாய்கா கோயல், அயோனிகா பால் போன்ற புதுமுகங்களும் துப்பாக்கி சுடுதலில் கலக்கக் காத்திருக்கின்றனர். இவர்களில் ஜிதுராய் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றதோடு, உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றதன் மூலம் ஒலிம்பிக் வாய்ப்பையும் உறுதி செய்துள்ளார்.
மல்யுத்தத்தைப் பொறுத்தவரையில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற சுஷீல் குமார் பங்கேற்கவில்லை. இதனால் மல்யுத்தத்தில் தங்கப் பதக்கத்துக்காக காத்திருக்கும் இந்தியாவின் 28 ஆண்டுகால காத்திருப்பை யோகேஷ்வர் தத் முடிவுக்கு கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே உள்ளது. இந்தப் போட்டிக்கான அதிகாரப்பூர்வமாக வாசகமாக "பன்மயம் ஒளிர்கிறது இங்கே" என்ற வார்த்தை இடம்பெற்று ள்ளது.
ஆசியாவின் வரலாறு, கலாச்சாரம் உள்ளிட்டவற்றின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் மேற்கண்ட வாசகம் இடம்பெற்றுள்ளது. போட்டியின் சின்னமாக (மேஸ்காட்) இன்சியானின் சாங்டோ தீவில் வசிக்கும் கடல் நாய்கள் (ஸ்பாட் சீல்ஸ்) அறிவிக்கப்பட்டு ள்ளன. அவை பரேமி, சுமுரோ, விச்வோன் என அழைக்கப்படுகி ன்றன. கொரிய மொழியில் பரேமி, சுமுரோ, விச்வோனுக்கு முறையே காற்று, நடனம், ஒளி என்பது பொருள். வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே அமைதியை வலியுத்தும் வகையில் மேற்கண்ட சின்னத்தை தேர்வு செய்தனர் போட்டி ஏற்பாட்டாளர்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.