முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரசாந்த்பூஷன் மீது அவதூறு வழக்கு தொடர சிபிஐ மனு

ஞாயிற்றுக்கிழமை, 21 செப்டம்பர் 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, செப் 22:

மூத்த வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், காமினி ஜெய்ஸ்வால் ஆகியோர் மீதும் அவர்களது தன்னார்வ தொண்டு நிறுவனம் மீதும் புதிதாக ஓர் அவதூறு வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்குமாறு உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு மீதான விசாரணை தொடர்பாக சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா மீது பிரசாந்த் பூஷனும், காமினி ஜெய்ஸ்வாலும் அவர்கள் சார்ந்த பொது நல வழக்குகளுக்கான தொண்டு நிறுவனமும் வேண்டுமென்றே அவதூறான குற்றச்சாட்டுகளை பரப்பி வருகின்றனர். இது இந்திய குற்றவியல் தண்டனை சட்ட பிரிவின் கீழ் குற்றமாகும். இது தொடர்பாக அவர்கள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய அனுமதிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஞ்சித் சின்ஹா வீட்டு வருகை பதிவேடு விவரங்களை அளித்த நபரின் பெயரை வெளியிட முடியாது என மறுத்துள்ள அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேற்பட்டவர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்துக்கு மாறாக அவதூறாக பேசி வருகின்றனர். எனவே அவர்கள் மீது புதிய வழக்கை தொடர அனுமதி அளிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்