முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய போட்டி: துப்பாக்கி சுடுதலில் மீண்டும் பதக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 21 செப்டம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

இன்சியான், செப்.22 - ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா நேற்று தனது 2வது வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது. ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் குழுப் போட்டியில் இந்திய அணி வென்கலப் பதக்கத்தைப் பெற்றது.

தங்கம் வென்றிருந்த ஜித்து ராய், நேற்றைய பிரிவில் 5வது இடத்தைப் பிடித்தார். நேற்று முன்தினமும் இந்திய துப்பாக்கிச் சுடும் வீரர்கள்தான் அசத்தினர். இன்றும் அவர்களின் ஆதிக்கம் சிறப்பாக இருந்தது.

ஆடவர் குழு 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் நேற்று இந்திய அணி 3வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது. நேற்று முன்தினம் நடந்த 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று அசத்தியிருந்தார் இந்தியாவின் ஜித்து ராய்.

ஆனால் நேற்று நடந்த 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் அவர் ஏமாற்றம் அளித்தார். பதக்க வாய்ப்பை நழுவ விட்ட அவர் 5வது இடத்தையே பிடித்தார். இந்தியா நேற்று வெண்கலம் வென்ற போட்டியில் இந்தியக் குழுவில் ஜித்துவும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஒரு தங்கம், 2 வெண்கலத்துடன் இந்தியா பதக்கப் பட்டியலில் 7வது இடத்திற்கு இறங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்