முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக வீரர் கோஷலுக்கு ரூ.30 லட்சம்: முதல்வர்

புதன்கிழமை, 24 செப்டம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, செப்.25:ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர் சவ்ரவ் கோஷலுக்கு ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்..

முதல்வர் ஜெயலலிதா கோஷலுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தென்கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் ஆடவர் போட்டியில் நீங்கள் வெள்ளிப் பதக்கம் பெற்று உங்கள் விளையாட்டு போட்டி வரலாற்றில் சாதனை படைத்திருப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நீங்கள் 4-வது முறையாக பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தகைய சாதனை புரிந்த உங்களுக்கு தமிழக மக்களின் சார்பில் இதயங்கனிந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெறும் வீரர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நான் அறிவித்தேன். இந்த ரொக்கப் பரிசை மாநில அரசிடமிருந்து உங்களுக்கு வழங்கப்படும்.

உங்களுக்கும், நீங்கள் வெற்றி அடைய உதவிகரமாக இருந்தவர்களுக்கும் பாராட்டு தெரிவிப்பதுடன் இது போன்ற சாதனையை நாட்டிற்கும் சாதனையை புரிய வேண்டும் என்று நாட்டின் சார்பில் தமிழகத்தின் சார்பில் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு முதல்வர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்