எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூர், செப்.29 - பெங்களூரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுக்க, தொடர்ந்து அடிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் 142/7 என்று தோற்றது. இதனால் அரையிறுதி வாய்ப்பை இழந்தது இந்த அணி.
14 ஓவர்கள் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் மந்தமாகவே இருந்தது. பிறகு ஜடேஜா, தோனி இணை பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் மட்டமான பந்து வீச்சை பதம் பார்த்தனர். கடைசி 6 ஓவர்களில் 86 ரன்கள் அடித்து நொறுக்கப்பட்டது. பிரெண்டன் மெக்கல்லம், டிவைன் ஸ்மித் ஆகியோர் ஆட்டமிழந்ததுடன் ரெய்னா (1) ரன் அவுட் ஆனது சென்னை அணிக்கு பின்னடைவு ஏற்படுத்தியது. பெர்த் ஸ்பின்னர்கள் டிவைன் பிராவோ, மிதுன் மன்ஹாஸ் ஆகியோரைக் கட்டுப்படுத்தினர். சைனமன் பவுலர் பிராட் ஹாகை ஆடத் திணறினர். இருவரும் இணைந்து 34 பந்துகளில் 23 ரன்களையே எடுக்க முடிந்தது.
ஜடேஜா இறங்கியபோதும் ரன்கள் குவியத் தொடங்கவில்லை. 6வது ஓவருக்குப் பிறகு 15வது ஓவரின் முதல் பந்தை பிராவோ பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தையும் நேர் பவுண்டரி அடித்து அடுத்த பந்தில் அவுட் ஆனார். தோனி களமிறங்கி அராபத்தின் புல்டாஸை லெக் திசையில் மிகப்பெரிய சிக்சரை அடிக்க அதுவரை நன்றாக வீசிய பிராட் ஹாக் பந்தை மேலேறி வந்து ஒரு சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்தார் ஜடேஜா.
19வது ஓவர் பெர்த் அணியின் தோல்விக்கு பெரும் காரணமாக அமைந்தது. அராபத் அந்த ஓவரில் 27 ரன்களை விட்டுக் கொடுத்தார். முதல் பந்தில் தோனி 2 பிறகு ஒரு சிங்கிள், பிறகு ஜடேஜா ஃபைன்லெக்கில் ஒரு பவுண்டரி, பிறகு ஒரு சிங்கிள், தோனி ஸ்டரைக்கிற்கு வந்தார். 5வது பந்து உயரமான ஃபுல்டாஸ். நோ.பால், தோனி அதனை ஃபைன் லெக் திசையில் சிலபல பார்வையாளர்கள் வரிசையைத் தாண்டி அடித்தார். மீண்டும் ஒரு ஃபுல்டாஸ் அதனை ஸ்கொயர் லெக் திசையில் அடித்தார். பந்து மேலே மேலே மேலே சென்று கொண்டிருந்தது. கீழே இறங்குமா என்ற நிலையில் கூரையில் விழுந்து மைதானத்திற்கு வெளியேயானது. ஆனால் இது தோனியின் மிகப்பெரிய சிக்சர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த பந்து மிடிவிக்கெட்டில் ஒரு சிக்சர்.
16 பந்துகளில் 4 சிக்சர்கள் அடித்த தோனி 20வது ஓவரில் 35 ரன்களில் அவுட் ஆனார். ஜடேஜா 28 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 44 ரன்கள் எடுத்தார். இவர்தான் அதிகபட்ச ஸ்கோர். கடைசி 4 ஓவர்களில் 66 ரன்கள். சென்னை அணி 155 ரன்களை எட்டியது.
இலக்கைத் துரத்திய ஸ்கார்ச்சர்ஸ் பவர் ப்ளேயில் 35 ரன்கள் எடுத்தனர். மிட்செல் மார்ஷ் 9வது ஓவரில் தோனியிடம் கேட்ச் கொடுக்க அது நோபால் ஆனது. ஆனால் அஸ்வின் வீசிய 10வது ஓவரில் டீப் ஸ்கொயர் லெக் திசையில் அவர் அவுட் ஆனார். 6வது விக்கெட்டுக்காக ஆஷ்டன் டர்னர், நேதன் கூல்டர்-நைல் இணைந்து 33 பந்துகளில் 6வது விக்கெட்டுக்காக 50 ரன்களைச் சேர்த்தபோது ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு நம்பிக்கை துளிர் விட்டது. 13 பந்துகளில் 33 எடுத்தால் வெற்றி என்ற சிறு நம்பிக்கை நிலை தோன்றியது. ஆனால் டர்னர் ரன் அவுட் ஆக பெர்த் தோல்வி தழுவியது.
இந்த வெற்றி மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 10 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் உள்ளனர். லாகூர் லயன்ஸ் 6 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் உள்ளனர். சென்னை அணியில் அஸ்வின் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் நெஹ்ரா 2 விக்கெட்டுகளையும் மோகித் சர்மா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். ஜடேஜா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
25 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு