முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோசடி வழக்கில் கைதான சரிதா நாயர் நடிகை ஆனார்

புதன்கிழமை, 1 அக்டோபர் 2014      ஊழல்
Image Unavailable

 

திருவனந்தபுரம், அக் 2:

கேரளாவில் சூரிய ஒளி மின்சார கருவிகள் அமைத்து தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் பெண் தொழிலதிபர் சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். இந்த சோலார் பேனல் மோசடியில் மாநிலத்தின் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கும், சினிமா நடிகைகளுக்கும் தொடர்பு இருப்பதாக பரபரப்பு கிளம்பியது.

முதல்வர் உம்மன்சாண்டியின் உதவியாளர், பாதுகாவலர் ஆகியோருக்கும் மோசடியில் தொடர்பு இருப்பதாக கிளம்பிய குற்றச்சாட்டை தொடர்ந்து அவர்களும் நடவடிக்கைக்கு ஆளானார்கள். சினிமா நடிகை ஷாலுமேனனும் இந்த வழக்கில் கைதானார். இப்படி அரசியலையும், திரையுலகையும் கலக்கிய சரிதா நாயர் சமீபத்தில் ஜாமீனில் விடுதலையானார். அவர் சினிமாவில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியானது.

இப்போது அவர் சூரஜ்சுகுமார் நாயர் தயாரித்து கிரன் அனில்குமார் டைரக்ட் செய்யும் அந்திய கூடாசா என்ற மலையாள படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அந்திய கூடாசா என்பதற்கு அர்த்தம் கிறிஸ்தவர்கள் நோய்வாய்பட்டு இறக்கும் தருவாயில் அவர்களுக்கு  பாதிரியார் கோதுமை அப்பத்தை வழங்குவார். அதற்கு தமிழில் அவஸ்தை கொடுத்தல் என்று அர்த்தம். இதைத்தான் மலையாளத்தில் அந்திய கூடாசா என்கிறார்கள். இந்த படத்தின் சூட்டிங்கின் போது சரிதா நாயர் போன் பேசுவது போல ஒரு காட்சி எடுக்கப்பட்டது. இதில் முதல் டேக்கிலேயே சரிதா நாயரின் நடிப்பு பிரமாதமாக இருந்ததாக படத்தின் டைரக்டர் பாராட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்