முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டனில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 12 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

லண்டன், அக் 13:

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கு தனிநாடு உருவாக்கி உள்ளனர். தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன், பிரான்சு உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து அங்கு செல்லும் இளைஞர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து சண்டையில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே இங்கிலாந்தில் தலைநகர் லண்டனில் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தெரியவந்துள்ளது. எனவே லண்டனில் இப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு ஆயிரக்கணக்கானவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் 5 பேரை ஸ்காட்லாந்து போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உண்டா?அல்லது லண்டனில் தாக்குதல் நடத்த திட்டம் உண்டா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த தகவலை லண்டன் மாநகர மேயர் போலிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்