முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் கார் குண்டு தாக்குதல்: 38 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 12 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

பாக்தாத், அக் 13 - ஈராக்கில் நடந்த கார் குண்டுகள் தாக்குதலில் 38 பேர் பலியாகினர்.

ஈராக்கில் மேற்கு பகுதியில் பல பகுதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஷியா பிரிவினருக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் பாக்தாத்தில் நேற்று முன்தினம் 3 இடங்களில் கார் குண்டு தாக்குதல்களை நடத்தினர். பாக்தாத் அருகேயுள்ள வடக்கு காதிமியா, ஷூலா ஆகிய இடங்களில் இந்த தாக்குதல்கள் நடந்தன.

அதில் 38 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதற்கிடையே ஐ.எஸ். தீவிரவாதிகள் ப ல இடங்களில் தாக்குதல் நடத்தியதில் 14 பேர் உயிரிழந்தனர். பாபுபா என்ற இடத்தில் காயமடைந்த ராணுவ வீரர்களை ஏற்றி சென்ற ஆம்புலன்சு மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். பாக்தாத் அருகே மெஷா தா என்ற இடத்தில் மார்க்கெட்டில் நடந்த தற்கொலை தாக்குதலில் 7 பேர் பலியாகினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்