முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.,கில் அமெரிக்க ஆளில்லா விமானம் தாக்குதல்

ஞாயிற்றுக்கிழமை, 12 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

பெஷாவர், அக்.13 - பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் பிராந்தியத்தில் அமெரிக்க ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியது.இதில் 4 தீவிரவாதிகள் பலியாயினர். கடந்த 7 நாட்களில் நடந்த அமெரிக்க வான்வழி தாக்குதலில், இதுவரை 29 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தானின் வட மேற்கே உள்ள வடக்கு வஜிரிஸ்தான் பிராந்தியத்தில் ஏராளமான தலிபான் மற்றும் அல்கொய்தா ஆதரவு தீவிரவாத முகாம்கள் உள்ளன. இங்கிருந்தபடி ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் பல்வேறு தீவிரவாத குழுக்கள் தற்கொலை படை தாக்குதல் நடந்தி வருகின்றன. இந்த பிராந்தியத்தில் தீவிரவாத குழுக்களின் செயல்பாடுகளை முற்றிலும் அழிக்க அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

வடக்கு வஜிரிஸ்தானில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 4 தீவிரவாதிகள் பலியானார்கள் என்று பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. கடந்த 7 நாட்களில் நடந்த அமெரிக்க தாக்குதலில் இதுவரை 29 தீவிரவாதிகள் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானின் பழங்குடி பிராந்தியமான வடக்கு வஜிரிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதலுக்கு அப்பகுதி பழங்குடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வான்வழி தாக்குதல் மூலம் பாகிஸ்தானின் இறையாண்மையை அமெரிக்கா மீறி வருவதாக வஜிரிஸ்தான் பிராந்திய அரசு வட்டாரங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்