எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, அக்.13 - டெல்லியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்று முதல் போட்டி தோல்விக்கு பதிலடி கொடுத்தது.
பேட்டிங்கில் கோலி, ரெய்னா, கடைசியில் தோனி ஆகியோர் அரைசதங்கள் கடந்தனர். பந்து வீச்சில் மொகமது ஷமி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார், ரவிந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்த இந்தியா ஒரு மிகச்சிறந்த வெற்றியச் சாதித்தது. மொகமது ஷமி 9.3 ஓவர்கள் வீசி 36 ரன்களுக்கு 4 விக்கெடுகளைக் கைப்பற்றியது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது சிறந்த பந்து வீச்சாக அமைந்தது.
வெற்றி பெற 264 ரன்கள் தேவை என்று களமிறங்கிய மேற்கிந்திய அணியின் வெற்றிப்பாதை 35 ஓவர்கள் வரை அபாரமாகவே இருந்தது. அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை அந்த நிலையில் எடுத்திருந்தது. அதன் பிறகு 45 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்களுக்கு 46.3 ஓவர்களில் சுருண்டு தோல்வி தழுவியது.
ஆனால் மொகமது ஷமி, ஜடேஜா தங்களிடையே 6 விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொள்ள அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ் ஆகியோரும் சிக்கனமாக வீசினர். இதனால் மேற்கிந்திய அணி விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.
தோனியின் கள அமைப்பில் பெரும் முன்னேற்றம் தெரிந்தது. ஜடேஜா, மிஸ்ராவை வீச அழைத்த போது நெருக்கமாக பீல்டிங்குகளை அமைத்து விக்கெட்டுகளைக் கைப்பற்றும் தீவிரத்தை வெளிப்படுத்தினார். விக்கெட்டுகளை வீழ்த்தும் அவரது தீவிர கள அமைப்பினால்தான் மேற்கிந்திய அணியின் பேட்ஸ்மென்களுக்கு நெருக்கடி அதிகரித்தது. அடித்து ஆடுவதா, இல்லை சிங்கிள், இரண்டு என்று எடுத்து படிப்படியாக முன்னேறுவதா என்ற குழப்பம் தோன்றியது.
அபாரமாக ஆடி ஏறக்குறைய தனது 97 பந்துகளில் 97 ரன்கள் மூலம் டிவைன் ஸ்மித் மேற்கிந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் செல்லும் நிலையில் பவர் பிளேயின் முதல் ஓவரிலேயே மொகமது ஷமியை தோனி பந்து வீச அழைக்க அபாரமான யார்க்கரில் ஸ்மித் பவுல்டு ஆனார். ஆனால் சாமுயெல்ஸ் 38 பந்துகளில் 1 சிக்சருடன் அவர் 16 ரன்கள் எடுத்து உமேஷ் யாதவ் வீசிய ஷாட் பிட்ச் பந்தை ஆஃப் திசையில் தூக்கி அடிக்க முயன்றார் ஆனால் பந்து பாயிண்ட் திசையில் கோலி கையில் கேட்ச் ஆனது.
தினேஷ் ராம்தின் 3 ரன்களில் அமித் மிஸ்ரா பந்தில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிறகு 43வது ஓவரில் ஜடேஜா, ஆந்த்ரே ரசலை ஸ்டம்ப்டு முறையில் வீழ்த்தினார். தோனி அதி அற்புதமாக ஸ்டம்பிங் செய்தார். பிளாஷ் ஸ்டம்பிங் அது. .
அதே ஓவரின் கடைசி பந்தில் டேரன் சாமி ஆக்ரோஷமான ஷாட் ஆட நினைத்து பந்தை கோட்டைவிட்டு பவுல்டு ஆனார். டிவைன் பிராவோ 10 ரன்கள் எடுத்திருந்த போது ஷமி பந்தை நேராக லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்தார். டெய்லர் லாங் ஆன் திசையில் கேட்ச் கொடுத்து ஜடேஜாவிடம் வீழ்ந்தார். கடைசியில் ரவிராம்பால் விக்கெட்டை ஷமி தானே கேட்ச் பிடித்து விக்கெட்டைக் கைப்பற்ற தோனி வெற்றிப் பெருமிதத்தில் எம்பிக் குதித்தார்.
முன்னதாக டேரன் பிராவோ, ஸ்மித் இணைந்து தொடக்க விக்கெட்டுக்காக 64 ரன்களை 13 ஓவர்களில் சேர்த்தனர். டேரன் பிராவோ 26 ரன்கள் எடுத்து ஷமியின் அபாரமான ஆங்கிள் பந்துக்கு பவுல்டு ஆனார். ஆனால் கெய்ரன் பொலார்ட் களமிறங்குவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர் 1 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 50 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து, இவரும் ஸ்மித்தும் இணைந்து 2வது விக்கெட்டுக்காக 15 ஓவர்களில் 72 ரன்ளைச் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். பொலார்ட், மிஸ்ரா பந்தில் அவுட் ஆனதும் ஒரு திருப்பு முனை. இவர் ஆட்டமிழந்த பிறகு 7 ஓவர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வறட்சியாக அமைந்தது.
கடந்த போட்டியை விட பந்துவீச்சு மாற்றம், பேட்டிங் வரிசையில் மாற்றம், கள அமைப்பில் விக்கெட்டுகள் எடுக்கும் அவசியத்தின் தீவிரம் என்று தோனியின் அணுகுமுறையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் வெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளது.
ஷமி 2வது போட்டியில் தொடர்ந்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். பாசிடிவ்வாக டாஸ் வென்று பேட் செய்ய முடிவெடுத்ததும் வெற்றிக்கு ஒரு காரணம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.