முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியா வன்முறை: ராணுவ தாக்குதலில் 28 பேர் பலி

திங்கட்கிழமை, 27 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

திரிபோலி, அக்.28 - லிபியாவில் இஸ்லாமிய தீவிரவாதிகள் தொடர்ந்து வன்முறை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் தாக்குதலை முறியடிக்க லிபிய ராணுவம் துப்பாக்கி தாக்குதல் நடத்தியதில் 28 பேர் பலியானார்கள் என்று லிபிய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

லிபியாவில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளை ஒருங்கிணைத்து சுயாட்சி பிராந்தியமாக அறிவிக்க வேண்டும் என்று இஸ்லாமிய தீவிரவாதிகள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். அவர்கள் கடந்த சில மாதங்களாக திரிபோலி, பெங்காசி ஆகிய பல்வேறு நகரங்களில் வன்முறை தாக்குதலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இஸ்லாமிய கொல்கைகளை ஏற்காத மக்களை கொன்று குவித்து வருகின்றனர்.

இந்நகரங்களில் தீவிரவாதிகளின் வன்முறை தாக்குதலை முறியடிக்க கடந்த 15-ஆம் தேதி முதல் லிபிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், பெங்காசி நகருக்கு அருகே இஸ்லாமிய தீவிரவாதிகள் பதுங்கியுள்ள வீடுகளை நேற்று முன் தினம் லிபிய ராணுவத்தினர் சோதனையிட்ட போது, இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி தாக்குதல் நடந்தது. இதில் 28 தீவிரவாதிகள் பலியானார்கள் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

திரிபோலி மற்றும் பெங்காசி உள்ளிட்ட நகரங்களில் கடந்த 15-ஆம் தேதி முதல் லிபிய ராணுவம் நடத்தி வரும் துப்பாக்கி தாக்குதலில் இதுவரை 170 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்