முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 பேர் பலி: திருப்பதி ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்டு

வியாழக்கிழமை, 30 அக்டோபர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

நகரி, அக் 31 - திருவள்ளூரை சேர்ந்தவர் லட்சுமி(30). இவரது ஒரு வயது மகன் மகேஷ். இந்த நிலையில் லட்சுமி, தனது மகன் மகேசுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றார். இலவச தரிசனத்தில் அவர் சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்றார். அப்போது அங்கு பலத்த மழை பெய்தது. எனவே லட்சுமி மழைக்காக அங்குள்ள கூரையின் கீழ் ஒதுங்கினார். அங்கு தேங்கி கிடந்த தண்ணீரில் மின் வயர் அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இதை கவனிக்காமல் லட்சுமி தண்ணீரில் மிதித்தார். அப்போது லட்சுமியும் அவரது மகன் மகேசும் மின்சாரம் தாக்கி பலியானார்கள். மின்சாரம் தாக்கி பலியான லட்சுமி குடும்பத்திற்கு ரூ . 8 லட்சம் உதவி தொகை வழங்கப்பட்டது. இந்த நிலையில் மின்சாரம் தாக்கிய தாய், மகன் இறந்தது தொடர்பாக திருப்பதி கோவில் ஊழியர்களான வயர்மேன் லட்சுமிபதி, அவரது உதவியாளர்கள் சுதாகர்டு, முனிந்தர்பாபு ஆகிய 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை திருப்பதி தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி கோபால் பிறப்பித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்