முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானில் துணை நிலை ஆளுநர் சுட்டுக் கொலை

செவ்வாய்க்கிழமை, 4 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

காபூல், நவ.05  - ஆப்கானில் கந்தஹார் மாகாணத்தின் துணை நிலை ஆளுநர் கல்லூரி வகுப்பில் இருந்த போது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆப்கானின் கந்தஹார் மாகாணத்தின் துணை நிலை ஆளுநர் அப்துல் காதீம் பட்டியால் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பயிற்சி வகுப்பில் இருந்தபோது மர்ம நபர்களால் சரமாரியாக சுட்டுக் கொல்லப்பட்டார்.

வகுப்பறைக்கு வெளியே இருந்து அப்துல் காதீமை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படுகொலைக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் கடந்த சில மாதங்களாக அரசுக்கு எதிரான நடவடிக்கையை அந்த பகுதியில் தாலிபான் பயங்கரவாதிகள் தீவிரப்படுத்தி உள்ளதால் இதற்கு அவர்களின் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்