முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரசில் சேரவிலை: நடிகர் கார்த்திக் பல்டி

வியாழக்கிழமை, 6 நவம்பர் 2014      சினிமா
Image Unavailable

 

சென்னை, நவ 7 - நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக், நேற்று முன்தினம் சத்தியமூர்த்தி பவனுக்கு சென்று காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்தார். நாடாளும் மக்கள் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க போவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அவர் கூறியதாவது,

என் கட்சியை கலைத்து விட்டு காங்கிரசில் சேர்ந்ததாக கூறுவது யாரோ கிளப்பி விட்ட வதந்தி. நான் எனது கட்சியை கலைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் எங்கள் நட்பு இன்னும் தொடர்கிறது என்பதை சொல்வதற்காகவும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள இளங்கோவனுக்கு பாராட்டு தெரிவிக்கவுமே நான் சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றேன். ஒரு தே ர்தலில் தோற்று விட்டால் கட்சி ஒன்றுமில்லாமல் போய் விடும் என கணக்கு போடுவது தவறு. கடந்த தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள். அதனால் பாஜகவுக்கு வாய்ப்பளித்தார்கள். இப்போது அந்த கட்சிக்கு ஏன் ஓட்டு போட்டோம் என்று வருந்துகிறார்கள். ஜி.கே. வாசன் ரொம்ப பெரிய மனிதர். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் மீண்டும் காங்கிரசுக்கு வர வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். ஜெயிப்பதும் தோற்பதும் காங்கிரசுக்கு சாதாரணம். தமிழ்நாட்டை பொறுத்தவரை இப்போது இருப்பது புது காங்கிரஸ். மக்களின் ஆதரவும் இந்த காங்கிரசுக்குத்தான். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்