எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா, நவ.14 - கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தின் 150-வது ஆண்டு விழாவை ரோஹித் சர்மா தனது 3 உலக சாதனைகளினால் சிறப்புறச் செய்துள்ளார். இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 404 ரன்கள் குவித்தது. 264 ரன்களை 173 பந்துகளில் குவித்து 50-வது ஓவரின் கடைசி பந்தில் அவுட் ஆனார் ரோகித் சர்மா.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரண்டு இரட்டைச் சதம் அடித்த முதல் வீரர், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச இன்னிங்ஸ் ஸ்கோர் எடுத்த வீரர், சர்வதேச ஒருநாள் போட்டியில்ல் முதல் முறையாக 250 ரன்களைக் கடந்த வீரர் என ரோஹித் சர்மா 3 உலக சாதனைகள் படைத்த இந்த இன்னிங்ஸில், இந்தியா 5-வது முறையாக ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 400 ரன்களுக்கும் மேல் குவித்தது.
தோனி தனது ட்விட்டர் பதிவில் ரோஹித்திற்கு இரட்டைச்சத சாதனைக்காக வாழ்த்து கூறியுள்ளார், அதில், "ரோஹித் இன்று ஆட்டமிழக்காமல் இருந்தால் நிச்சயம் 250 ரன்கள் எடுப்பார்" என்று கூறியிருந்தார். தோனியின் இந்த எதிர்பார்ப்பை ரோஹித் சர்மா பூர்த்தி செய்தார். அவர் 173 பந்துகளில் 33 பவுண்டரி மற்றும் 9 சிக்சர்களுடன் 264 ரன்கள் விளாசினார். கடைசி பந்தில் ரோகித் சர்மா அவுட் ஆனார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இது 2-வது அதிகபட்ச ஒருநாள் போட்டி ஸ்கோராகும். ரோஹித் அரை சதம் எடுக்க 72 பந்துகள் எடுத்துக் கொண்டார். முதல் 100 பந்துகளில் 100, பிறகு 150 ரன்களை 125 பந்துகளில் எட்டினார். 200 ரன்களை 151 பந்துகளில்ம் 250 ரன்களை 166 பந்துகளில் எட்டினார். கடைசி 50 ரன்கள் 15 பந்துகளில் எடுக்கப்பட்டது.
2 மாதகாலம் கிரிக்கெட்டிலிருந்து ரோஹித் காயம் காரணமாக விலகியிருந்தார். இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது சதம் கண்டார். ஆனாலும் அணித் தேர்வு அதற்கு முன்னரே செய்யப்பட்டு விட்டதால் அவரால் முதல் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட முடியவில்லை. ராபின் உத்தப்பாவுடன் 5-வது விக்கெட்டுக்காக சேர்த்த 128 ரன்கள் 58 பந்துகளில் விளாசப்பட்டது. உத்தப்பா இதில் 16 ரன்களை மட்டுமே எடுத்து எதிர்முனையில் இருந்து ரோஹித் சர்மாவின் தாண்டவத்தை ரசித்துக் கொண்டிருந்தார்.
பவுண்டரிகளும் சிக்சர்களும் கண்களுக்கு பெரிய விருந்து என்று இர்பான் பத்தான் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. ரஹானே 28 ரன்களுக்கு நன்றாக ஆடினார். அவர் லெக் திசையில் திருப்பி அடிக்க நினைத்து மேத்யூஸ் பந்தில் எல்.பி. ஆனார். அம்பாத்தி ராயுடு 8 ரன்களில் எரங்காவின் அபார பந்தில் பவுல்டு ஆனார்.
13-வது ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 59 ரன்கள் என்று இலங்கை கட்டுப்பாட்டில்தான் இந்தியா இருந்தது. அதன் பிறகு கோலியும், ரோஹித்தும் இணைந்து இன்னிங்சை நிலைப்படுத்தினர். இருவரும் சேர்ந்து 202 ரன்களை 25 ஓவர்களில் சேர்த்தனர். கோலி 6 பவுண்டரிகளுடன் 64 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து சற்றே தயங்கி 2-வது ரன்னை ஓடி ரன் அவுட் ஆனார். 39-வது ஓவரில் இந்தியா 261/3 என்று இருந்தது. அப்போது ரோஹித் சர்மா 152 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பிறகு 11 ஓவர்களில் 143 ரன்கள் எடுக்கப்பட்டது. இதில் ரோகித் சர்மா மட்டும் 112 ரன்களை விளாசியுள்ளார்.
இந்த இன்னிங்ஸை நன்றாக திட்டமிட்டு ஆடினார் ரோஹித் சர்மா. இலங்கை பந்து வீச்சாளர் குலசேகரா, 9 ஓவர்களில் 89 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மீண்டும் அழைக்கப்பட்ட புதிர் ஸ்பின்னர் அஜந்தா மெண்டிஸ் 7 ஓவர்களில் 70 ரன்களை கொடுத்தார். மொத்தம் 300 பந்துகளில் 173 பந்துகளை ரோஹித் சர்மா சந்தித்தார். இந்திய அணியின் மொத்த ரன்களில் பாதிக்கும் மேல் ரோகித் மட்டையிலிருந்து வந்ததுதான்.
அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் இரட்டை சதம் எடுக்கும் போது ரோஹித் சர்மா 16 சிக்சர்களை அடித்து உலக சாதனை நிகழ்த்தினார் என்றால் இன்றைய அதிரடி இரட்டைச் சத உலக சாதனையில் 33 பவுண்டரிகளை அடித்து பவுண்டரி சாதனையையும் தன் வசப்படுத்தியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் தனது சாதனை இரட்டைச் சதத்தில் 25 பவுண்டரிகள் 3 சிக்சர்களை அடித்திருந்தார். சேவாக் 219 ரன்களை எடுத்த போது, 25 பவுண்டரி 7 சிக்சர்களை எடுத்திருந்தார். தற்போது ரோஹித் சர்மா 33 பவுண்டரிகளை தனது இரட்டைச் சதத்தில் அடித்து சாதனையை தன்வசமாக்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.