முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிறிஸ்துமஸ் - புத்தாண்டு - பொங்கலுக்கு சிறப்பு ரெயில்கள்

சனிக்கிழமை, 15 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.16 - மேல்மருவத்தூர் கோவில் திருவிழா, கிறிஸ்துமஸ், புத்தாண்டு திருவிழா, தைப்பூசம் மற்றும் பொங்கல் ஆகிய பண்டிகை காலங்களில் ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கோவை-செங்கல்பட்டு, ராமேசுவரம்-செங்கல்பட்டு இடையே சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கோவை-செங்கல்பட்டு இடையே வாரம் மூன்று முறை செல்லும் சிறப்பு ரெயில் (வ.எண்.06626), கோவையில் இருந்து வருகிற டிசம்பர் மாதம் 11, 14, 16, 18, 21, 23, 25, 28, 30, ஜனவரி மாதம் 1, 4, 6, 8, 11, 13, 15, 18, 20, 22, 25, 27, 29 மற்றும் பிப்ரவரி 1, 3 ஆகிய தேதிகளில் இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் செங்கல்பட்டுக்கு காலை 8 மணிக்கு வந்து சேரும்.

மறுமார்க்கமாக, செங்கல்பட்டு-கோவை இடையே வாரம் மூன்று முறை செல்லும் சிறப்பு ரெயில் (வ.எண்.06625), செங்கல்பட்டில் இருந்து வருகிற டிசம்பர் மாதம் 12, 15, 17, 19, 22, 24, 26, 29, 31, ஜனவரி மாதம் 2, 5, 7, 9, 12, 14, 16, 19,21, 23, 26, 28, 30 மற்றும் பிப்ரவரி 2, 4 ஆகிய தேதிகளில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் கோவைக்கு அதிகாலை 2.30 மணிக்கு செல்லும்.

இந்த ரெயில்கள் சோமனூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, விருதாச்சலம், விழுப்புரம் மற்றும் மேல்மருவத்தூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ராமேசுவரம்-செங்கல்பட்டு இடையே வாரம் இருமுறை செல்லும் சிறப்பு ரெயில் (வ.எண்.06752), ராமேசுவரத்தில் இருந்து வருகிற டிசம்பர் மாதம் 15, 17, 22, 24, 29, 31 மற்றும் ஜனவரி மாதம் 12 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 3 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும்.

மறுமார்க்கமாக, செங்கல்பட்டு-ராமேசுவரம் இடையே வாரம் இருமுறை செல்லும் சிறப்பு ரெயில் (வ.எண்.06751), செங்கல்பட்டில் இருந்து வருகிற டிசம்பர் மாதம் 16, 18, 23, 25, 30 மற்றும் ஜனவரி மாதம் 13, 15 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு, ராமேசுவரத்துக்கு அடுத்த நாள் அதிகாலை 2 மணிக்கு செல்லும்.

இந்த ரெயில்கள் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, தேவக்கோட்டை ரோடு, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, விருதாச்சலம், விழுப்புரம் மற்றும் மேல்மருவத்தூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ராமேசுவரம்-செங்கல்பட்டு வாராந்திர சிறப்பு ரெயில் (வ.எண்.06754), ராமேசுவரத்தில் இருந்து வருகிற டிசம்பர் மாதம் 19, 26 மற்றும் ஜனவரி மாதம் 2, 9, 16 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு, செங்கல்பட்டுக்கு அடுத்த நாள் அதிகாலை 3 மணிக்கு வரும்.

மறுமார்க்கமாக செங்கல்பட்டு-ராமேசுவரம் வாராந்திர சிறப்பு ரெயில் (வ.எண்.06753), செங்கல்பட்டில் இருந்து வருகிற டிசம்பர் மாதம் 20, 27 மற்றும் ஜனவரி மாதம் 3, 10, 17 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு, ராமேசுவரத்துக்கு அடுத்த நாள் அதிகாலை 2 மணிக்கு சென்றடையும்.இந்த ரெயில்கள் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, விருதாச்சலம், விழுப்புரம் மற்றும் மேல்மருவத்தூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேற்கூறப்பட்ட அனைத்து ரெயில்களுக்கும் டிக்கெட் முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்