முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்தாத் நகரில் கார் குண்டு தாக்குதலில் 17 பேர் பலி

சனிக்கிழமை, 15 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

பாக்தாத், நவ 1 6:

பாக்தாத் நகரின் வடக்கு பிராந்தியத்தில் நேற்று முன்தினம் 2 இடங்களில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 17 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் 57 பேர் படுகாயமடைந்தனர் என்று ஈராக் போலீஸ் மற்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்துக்கு வடக்கே திக்ரிஸ் ஆற்றுக்கு அருகே அதாமியா மாவட்டத்தில் கிரியாத் பகுதியில் நேற்று முன்தினம் காலை முதல் கார் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இத்தாக்குதலில் 7 பேர் பலியானார்கள். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதல் நடந்த சுமார் ஒரு மணி நேரத்தில் அதே பகுதியில் உள்ள உணவு விடுதி அருகே மற்றொரு கார் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இத்தாக்குதலில் 10 பேர் பலியானார்கள். மேலும் 32 பேர் படுகாயமடைந்தனர். இந்த 2 கார் வெடிகுண்டு தாக்குதல்களுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இந்த தாக்குதல்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை சன்னி பிரிவு முஸ்லீம்கள் துணையுடன் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஆக்கிரமித்து உள்ளனர். அத்துடன் சிரியா மற்றும் ஈராக் எல்லையில் உள்ள குர்தீஷ் பிராந்தியத்தில் எண்ணெய் கிணறுகளை கைப்பற்றி திருட்டுத்தனமாக கள்ளச்சந்தையில் எண்ணெய் விற்று வருவாயை அதிகரித்து வருகின்றனர். இரு நாடுகளிலும் அவர்களின் செயல்பாடுகளை முறியடிக்க அமெரிக்கா தலைமையிலான கூட்டு ப டையினர் நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்