முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லை நீர்மட்டம் உயர்வு: ஜெயலலிதாவுக்கு பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014      சினிமா
Image Unavailable

 

சென்னை, நவ.17 - அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தமிழக அரசின் சட்ட போராட்டத்தின் மூலம் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. 156 அடி உயரமுள்ள அணையில் 142 அடி தண்ணீரை தேக்கி வைக்கும் உத்தரவை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தொடர் முயற்சியால் தமிழகம் பெற்றது. தமிழக மக்களும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

இந்தநிலையில் 36 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் 141 அடியை நெருங்கியுள்ளது. 107 அடி நீர்மட்டம் இருந்தாலே தமிழகத்திற்கு தண்ணீர் வரத்தொடங்கி விடும் நிலையில், இப்போது 141 அடி நீர் உள்ளதால் கடைசி பகுதியான ராமநாதபுரம் மாவட்டம் வரை பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இத்தகைய நிலைக்கு காரணமான முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago