எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.18 - மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி மின் கட்டணம் மாற்றம் காரணமாக, ஏழை எளிய மக்கள், எந்தவிதத்திலும் பாதிப்படையாத வகையில் அதற்கு தேவைப்படும் கூடுதல் மானியத்தை தமிழ்நாடு அரசு, மின்சார வாரியத்திற்கு வழங்கும் என்பதை ஜெயலலிதா அறிவித்த உத்தரவாதத்தை அவரது வழியில் செயல்படும் இந்த அரசு, நிறைவேற்றும் என்று பாரதீய ஜனதா கட்சிக்கு தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதிலளித்துள்ளார்
இது குறித்து மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வ நாதன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
12.11.2014 அன்று நடைபெற்ற தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் பொதுக் குழுவில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் தமிழக அரசைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விரைவில் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது எனக் குறிப்பிட்டு அதற்கு தமிழக அரசை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி கண்டித்துள்ளது ‘அவலை நினைத்து உரலை இடிப்பதாக’ உள்ளது. தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சிக்கு இந்திய அரசியல் வரலாறும் தமிழக அரசியல் வரலாறும் தெரியவில்லை என்பதையே இது எடுத்து காட்டுகிறது. மின் கட்டண நிர்ணயக் கொள்கை குறித்து தற்போதைய பாரதிய ஜனதா அரசின் கொள்கை மற்றும் முந்தைய பாரதிய ஜனதா அரசின் கொள்கை பற்றியும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சிக்கு தெரியவில்லை போலும்! எனவே, அது குறித்து தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சிக்கு தெளிவுபடுத்துவது எனது கடமை என கருதுகிறேன்.
கூhந நுடநஉவசiஉவைல சுநபரடயவடிசல ஊடிஅஅளைளiடிn ஹஉவ 1998 என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சில சலுகைகளை அன்றைய பாரதிய ஜனதா கட்சி அறிவித்தது. ஒரு சில நன்மைகளை பெறுவதற்கு கடினமானவைகளை ஏற்றுக் கொள்வது போல, அன்றைய மத்திய பாரதிய ஜனதா அரசு சில சலுகைகளை அறிவித்து அதன் மூலம் மின்சார ஒழுங்குமுறை ஆணையச் சட்டத்தை ஏற்றுக் கொள்ள தூண்டியது. அப்போது தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சியில் இருந்தபோது தான் மத்திய அரசிடமிருந்து யஉஉநடநசயவநன யீடிறநச னநஎநடடியீஅநவே யீசடிபசயஅஅந என்ற திட்டத்தின் கீழ் முன்பணமாக நிதியைப் பெற்றது. இதற்காக மத்திய அரசோடு ஓர் ஒப்பந்தம் போடுவதாக அன்றைய திமுக அரசு ஒப்புக் கொண்டது. அந்த ஒப்பந்தத்தின் படி மின்சாரத் துறையில் பல சீர்திருத்தங்களை செயல்படுத்த ஒப்புதல் அளித்தது. அதாவது கூயஅடை சூயனர நுடநஉவசiஉவைல சுநபரடயவடிசல ஊடிஅஅளைளiடிn என்ற ஆணையத்தை அமைப்பது, மின் கட்டணங்களை திருத்தி அமைப்பதற்கான விண்ணப்பத்தை அதாவது கூயசகைக சுநஎளைiடிn ஞநவவைiடிn மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முன் தாக்கல் செய்வது, அதன் அடிப்படையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கட்டணங்களை நிர்ணயம் செய்வது என எல்லாவற்றிற்கும் ஒப்புதல் அளித்தது.
மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சராசரி மின் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான (உடிளவ டிக ளரயீயீடல) செலவு என்ன என்பதை நிர்ணயம் செய்து அதனடிப்படையில் கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியம் உற்பத்தி செய்கின்ற மின்சாரத்தை இந்த ஆணையம் 2003-2004 ஆம் ஆண்டுக்கு நிர்ணயம் செய்த தொகை யூனிட்டுக்கு 3 ரூபாய் 2 பைசா. இதுவே, 2010-2011 ஆம் ஆண்டுக்கு, முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியின் இறுதியில் யூனிட்டுக்கு 4 ரூபாய்
93 பைசாவாக உயர்ந்தது. 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு நிலக்கரி போன்ற இடுபொருட்களின் விலை உயர்வு, முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியால் ஏற்படுத்தப்பட்ட பெரும் கடன் சுமையின் காரணமாக அதற்கு செலுத்தப்படவேண்டிய வட்டித் தொகை, பணியாளர்களின் ஊதிய உயர்வு ஆகியவற்றின் காரணமாக, தற்போது யூனிட் ஒன்றுக்கு உற்பத்தி மற்றும் விநியோக செலவு 6 ரூபாய் 14 பைசா என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தேசமாக நிர்ணயித்து கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்தியுள்ளது. இறுதி உத்தரவுகளை இன்னும் வழங்கவில்லை.
1998-ல் நுடநஉவசiஉவைல சுநபரடயவடிசல ஊடிஅஅளைளiடிn ஹஉவ என்ற சட்டத்தை மத்திய பாரதிய ஜனதா அரசு கொண்டு வர முயன்றபோது மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு மத்திய அரசில் அங்கம் வகித்தது. எனவே, இதற்கான வரைவு சட்டத்தில் யாருக்கும் இலவசமாகவோ, குறைந்த கட்டணத்திலோ மின்சாரம் வழங்கவே இயலாது என இருந்த ஷரத்துக்களைப் பார்த்து, அதில் தேவையான திருத்தங்களை வலியுறுத்தி ஒரு சிலருக்கு மானியம் வழங்கலாம் என்பதை அதில் சேர்க்க வைத்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான். வரைவு சட்டத்தில், “கூhந ளுவயவந ஊடிஅஅளைளiடிn றாடைந னநவநசஅiniபே வாந வயசகைக ரனேநச வாளை ஹஉவ, ளாயடட nடிவ ளாடிற ரனேரந யீசநகநசநnஉந வடி யலே உடிளேரஅநச டிக நடநஉவசiஉவைல, ரெவ அயல னகைகநசநவேயைவந யஉஉடிசனiபே வடி வாந உடிளேரஅநச’ள டடியன கயஉவடிச, யீடிறநச கயஉவடிச, வடிவயட உடிளேரஅயீவiடிn டிக நநேசபல னரசiபே யலே ளயீநஉகைநைன யீநசiடின டிச வாந வiஅந யவ றாiஉh வாந ளரயீயீடல ளை சநளூரசைநன டிச வாந பநடிபசயயீhiஉயட யீடிளவைiடிn டிக யலே யசநய, வாந யேவரசந டிக ளரயீயீடல யனே வாந யீரசயீடிளந கடிச றாiஉh ளரயீயீடல ளை சநளூரசைநன” என்று இருந்தது. இதன்படி, மாநில அரசால் யாருக்கும் எந்தச் சலுகையும் வழங்க இயலாத நிலை இருந்தது. இதனை மாற்றி உட்பிரிவு 5 என்பதை சட்டத்தில் சேர்க்க வைத்தது புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தான்.
2003 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி திமுகவின் துணையோடு மத்தியிலே ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, அது வரை நடைமுறையில் இருந்த மின்சார சட்டம், மின் வழங்கல் சட்டம் மற்றும் ஒழுங்குமுறை ஆணையச் சட்டம் ஆகியவற்றை ரத்து செய்து 2003ஆம் ஆண்டைய மின்சாரச் சட்டம் என்ற சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டம் மின்சாரம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் உரிமையை மாநில அரசிடமிருந்து கைப்பற்றி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்படைக்க வழிவகை செய்தது. இந்த சட்டத்தின் பிரிவு 62-ன் கீழ் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு மின்சாரக் கட்டணங்களை நிர்ணயிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் பிரிவு 61(ப)-ன்படி நுகர்வோருக்கான மின்கட்டண விகிதங்கள் மின்சாரத்தை வழங்குவதற்கு ஏற்படும் செலவை ஒத்து இருக்க வேண்டுமென்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டைய மின்சார சட்டம் மற்றும் 2005-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மின் கட்டண ஒழுங்குமுறை ஆணைய விதிகளின்படி, மின்சாரம் தயாரிப்பதற்கு ஏற்படும் எரிபொருள் செலவு, தமிழ்நாடு மின்சார வாரியத்தால் பெறப்பட்ட கடன் மீதான வட்டித் தொகை மற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் மின் விகிதக் கட்டணம் மாறுதல் கேட்டு அதற்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்காவிட்டால், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தன்னிச்சையாக மின் கட்டண நிர்ணயம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்று ஒழுங்குமுறை ஆணைய விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயமும், தனது 11.11.2011 நாளிட்ட தீர்ப்பில் மின் பகிர்வு உரிமைதாரர்கள் மின் கட்டண நிர்ணயத்திற்கான மனுவினை சமர்ப்பிக்காமல் ஒரு மாதத்திற்கு மேல் தாமதம் செய்தால், மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் தன்னிச்சையாக மின்கட்டணங்களை நிர்ணயம் செய்ய வேண்டுமென ஆணையிட்டுள்ளது.
இந்த அடிப்படையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியின் விலை டன் ஒன்றுக்கு தற்போது 3298 ரூபாய் என உயர்ந்துள்ளதையும்; இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலை 6896 ரூபாய் என உயர்ந்துள்ளதையும்; பணியாளர் ஊதியம் மற்றும் ஒய்வூதியத்திற்கான செலவு நடப்பாண்டில் 4370 கோடி ரூபாய் என உயர்ந்துள்ளதையும் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான மேம்பாட்டுப் பணிகளுக்காக பெறப்பட்ட கடன்களின் மீதான வட்டி செலவினம் 8463 கோடி ரூபாய் என உள்ளதையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் நுகர்வோர்களுக்கான உத்தேச மின் கட்டண நிர்ணய அறிவிப்பை வெளியிட்டு அதன் மீது கருத்து கேட்புகளை நடத்தியுள்ளது.
அம்மா அவர்களின் அரசு 2011 ஆம் ஆண்டு பதவியேற்றபோது மின்சார வாரியத்தின் கடன் சுமை 45,000 கோடி ரூபாய் என்ற அளவை எட்டியிருந்தது. முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியில் 2010-11 ஆம் ஆண்டில் 21,892 கோடி ரூபாய் கடன் பெற்று அதில் தவணைத் தொகை மற்றும் வட்டிக்கு மட்டும்
12,667 கோடி ரூபாய்க்கு மேல் மின்சார வாரியம் செலுத்தியுள்ளது என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படக்கூடாது எனக் கூறும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சிக்கு மின் உற்பத்திக்கான இடுபொருட்களின் விலை உயர்த்தப்பட்டு வருவது தெரியுமா? தெரியாதா? மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைந்த பிறகு நிலக்கரிக்கானத் தீர்வையை டன் ஒன்றுக்கு ரூ.51.50லிருந்து ரூ.103/-ஆக 11.07.2014 முதல் உயர்த்தியுள்ளது. மின்சார வாரியம் இறக்குமதி செய்யும் நிலக்கரிக்கு 2014-15 ஆம் ஆண்டில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் உள்ளபடி 2.5 சதவீதம் சுங்கவரியும், 2 சதவீதம் உடிரவேநச எயடைiபே னரவல-ம் மத்திய அரசுக்கு செலுத்தப்பட வேண்டும். மேலும், தமிழகத்திலுள்ள அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை கொண்டு வருவதற்கான ரயில்வே கட்டணத்தையும் 2014-ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் 6.5 சதவீதம் உயர்த்தியுள்ளது. மேலும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு சொந்தமான, இயற்கை எரிவாயுவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு மத்திய அரசின் கெயில் (ழுஹஐடு) நிறுவனம் வழங்கி வரும் இயற்கை எரிவாயுவின் விலையை 1.11.2014 முதல் மத்திய அரசு 1 ஆஆக்ஷகூரு எரிவாயுவின் விலையை 4.2 ரு.ளு. னுடிடடயச என்ற விலையிலிருந்து 5.05 ருளு னுடிடடயச ஆக உயர்த்தியுள்ளது. இதனால், இயற்கை எரிவாயுவிலிருந்து உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் எரிபொருளின் செலவு யூனிட் ஒன்றுக்கு இருபது சதவீதம் உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள அனல் மின்நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி வெளி மாநிலங்களிலிருந்து கப்பல்கள் மூலம் கொண்டுவரப்பட வேண்டும். இதனால் நிலக்கரி விலையுடன் போக்குவரத்துச் செலவும் சேர்ந்து மின் தயாரிப்புச் செலவை அதிகரிக்கும். நிலக்கரிச் சுரங்கங்களுக்கு அருகிலேயே அனல் மின்நிலையங்கள் அமையப் பெற்றால் குறைவான போக்குவரத்துச் செலவின் காரணமாக மின் உற்பத்தி செலவு குறைவாகவே இருக்கும். அதிகப் போக்குவரத்துச் செலவு இருந்தாலும், நிலக்கரிச் சுரங்கங்களுக்கு அருகில் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் மின் கட்டணம் குறைவு என்பதை இங்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பிலுள்ள சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் நிலக்கரி வளம் அபரிமிதமாக உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள நிலக்கரி வளத்தைப் பயன்படுத்தி அம்மாநிலத்திலுள்ள அனல் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு 76 சதவீதமாகும். இதனால், அங்கு ஒரு யூனிட்டிற்கு ரூ.2.19 என்ற வீதத்தில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிகிறது. இருப்பினும், வீட்டு மின் இணைப்புகளுக்கு 200 யூனிட் பயன்படுத்துவோர் ரூ.620/-ம்
500 யூனிட் பயன்படுத்துவோர் ரூ.1,650/-ம் மின் கட்டணமாக செலுத்த வேண்டும்.இதைப்போன்றே, பாரதிய ஜனதா ஆட்சிப் பொறுப்பிலுள்ள மத்தியப் பிரதேசத்தில் அனல் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் உற்பத்திச் செலவு யூனிட் ஒன்றிற்கு ரூ.2.66 என்ற அளவிலேயே உள்ளது. இருப்பினும்,
200 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் நகர்ப்புறக் குடியிருப்பு வீட்டு மின் உபயோகிப்போர் ரூ.855/-ம் 500 யூனிட் பயன்படுத்துவோர் ரூ.3365/-ம் மின் கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஆனால், தமிழகத்தில் தான் இரண்டு மாதங்களுக்கு
200 யூனிட் பயன்படுத்தும் நுகர்வோர்க்கு ரூ.320/-ம், 500 யூனிட் பயன்படுத்தும் நுகர்வோர்க்கு ரூ.1,330/- மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
வீட்டு மின் நுகர்வோர் மற்றும் விவசாயிகளுக்கு, மின் கட்டணங்களில் மிக அதிக அளவு மானியமாக வழங்குவது அஇஅதிமுக அரசு தான். புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தலைமையில் 2011 ஆம் ஆண்டு அஇஅதிமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மின் நுகர்வோருக்கான மின் கட்டண மானியமாக 11,149 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. மேலும், 2014-15 ஆம் ஆண்டிற்கு 5,400 கோடி ரூபாய் மின் மானியத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் தெரிவித்துள்ள கருத்துகளின் அடிப்படையிலும், நுகர்வோர் நலன், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நலன், எதிர்கால மின் திட்டங்கள் மற்றும் கட்டமைப்புகளுக்கான செலவினங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டும், மின் கட்டண நிர்ணயம் குறித்த இறுதி அறிவிக்கையை வெளியிடும். அவ்வாறு வெளியிடப்படும் கட்டணம் காரணமாக, ஏழை எளிய மக்கள், எந்தவிதத்திலும் பாதிப்படையாத வகையில் அதற்கு தேவைப்படும் கூடுதல் மானியத்தை தமிழ்நாடு அரசு, மின்சார வாரியத்திற்கு வழங்கும் என்பதை புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளார்கள். புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் இந்த அரசு, அந்த உத்தரவாதத்தை நிறைவேற்றும் என்பதை தெரித்துக் கொள்கிறேன்..
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.