முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிராவில் பா.ஜ ஆட்சி கவிழும்: சரத்பவார்

செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

மும்பை, நவ.19 - மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி விரைவில் கவிழும் என்றும், அடுத்த தேர்தலுக்கு தயாராகும்படியும் தேசியவாத காங்கிரஸாருக்கு அக்கட்சியின் தலைவர் சரத் பவார் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று அவர் கூறும்போது:

தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. கூடிய விரைவில் இந்த ஆட்சி கவிழும். எனவே, மீண்டும் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்" என்று தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேசியவாத காங்கிரஸின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்