எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.19- 1992-ம் ஆண்டு தொட்டில் குழந்தை திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல், கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வரை, 4 ஆயிரத்து 500 குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். பெற்றோருக்கு ஆலோசனை வழங்கி 185 குழந்தைகள் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பிறந்த குழந்தை பெண் குழந்தையாக இருக்கும் பட்சத்தில், அதனை விரும்பாத சில பெற்றோர், அந்த குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து சாகடிப்பதாகவும் ‘ஸ்கேன்’ கருவியின் உதவியுடன், வயிற்றில் வளரும் குழந்தையை பார்த்து, பெண் குழந்தை என்றால் அதனை கருவிலேயே அழித்து விடுவதாகவும் கூறப்பட்டது.
இதனால், குழந்தைகளின் பாலின விகிதம் வெகுவாக வேறுபட்டு வந்தது. இந்த நிலையில் 1992-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15-ந் தேதி கருவில் இருக்கும் பெண் குழந்தையை அழித்துவிடச் சொல்லி மாமனார், மாமியார் வற்புறுத்தியதால், சேலம் மாவட்டம் தொப்பூர் காமராஜர்புரத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற 19 வயது இளம் மனைவி தற்கொலை செய்து கொண்டார் என செய்தி ‘தினத்தந்தி’யில், வெளியானது.
செய்தி வந்த அன்று காலையிலேயே, அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் இந்திர குமாரி மற்றும் உயர் அதிகாரிகளை அழைத்து, “பெண் குழந்தை வேண்டாம் என்று சொல்பவர்கள் அதை கொன்றுவிட வேண்டாம். அந்த குழந்தைகளை அரசிடம் ஒப்படைத்துவிடுங்கள், அரசு அந்த குழந்தைகளை வளர்க்கும்” என்று அறிவிக்குமாறு உத்தரவிட்டார்.
அதன்படி, முதல் கட்டமாக, இந்த சம்பவம் நடைபெற்ற சேலம் மாவட்டத்தில், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் முன்பும், ஒரு தொட்டிலை வைக்க சொல்லி ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்தார்.
அதைத் தொடர்ந்து, 2001-ம் ஆண்டு, தர்மபுரி, மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும், 2011-ம் ஆண்டு கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் தொட்டில் குழந்தை திட்டத்திற்கான மையங்கள் தொடங்கப்பட்டன. தொட்டில் குழந்தை திட்டம் குறித்து குழந்தைகள் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இந்த தொட்டில் குழந்தை திட்டத்தின் மூலம், கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வரை, 4 ஆயிரத்து 572 குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர், அதில் 3 ஆயிரத்து 766 பெண் குழந்தைகள், 806 ஆண் குழந்தைகள் ஆவார்கள். இதில், 2 ஆயிரத்து 946 குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டுள்ளனர்.
அவற்றில் 2 ஆயிரத்து 447 பெண் குழந்தைகள், 499 ஆண் குழந்தைகள் அடங்குவார்கள். தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் தலா ஆயிரம் குழந்தைகளுக்கு மேல் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், பெற்றோர் நேரடியாக வந்து குழந்தைகளை தொட்டில் குழந்தை திட்டத்திற்கு அளிக்க வந்தபோது, அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு 185 குழந்தைகள் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன.
குழந்தைகளை தத்து எடுக்கும் ‘ஏஜென்சிகள்’ தற்போது 15 உள்ளன. குழந்தைகளின் உடல் நிலை தத்து கொடுக்கும் அளவிற்கு வந்த பிறகு, குழந்தைகள் நல குழுமத்திற்கு தெரிவிக்கப்பட்டு, இந்த ‘ஏஜென்சிகளிடம்’ சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகள் வேண்டாம் என்று விரும்புபவர்கள் தான் பெருமளவில் குழந்தைகளை இந்த திட்டத்தில் கொண்டு வந்து கொடுத்துள்ளனர்.
தவறான உறவுகளால் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிக அளவில் இல்லை. மாற்றுத்திறனாளி பெற்றோரின் குழந்தைகளும் இந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ளன. முதல்-அமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு பெண் குழந்தை பிறந்து 3 ஆண்டுகளுக்குள் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டால் அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும்.
2 பெண் குழந்தைகள் எனில் தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. மேலும், தாலிக்கு தங்கம் போன்ற திருமண திட்டங்களும் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளன. குழந்தை பாலின விகிதத்தை சமன் செய்தல் மற்றும் குழந்தைகளின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற ஓரே நோக்கத்தில் தான் இந்த திட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் கடந்த 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டத்தின்படி, ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 942 பெண் குழந்தைகள் என்ற எண்ணிக்கை, 2011-ம் ஆண்டு, 4 புள்ளிகள் உயர்ந்து, 946 ஆக உயர்ந்துள்ளது.
‘ஸ்கேன்’ மையங்கள் மிகுந்த கண்டிப்புடன் பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று தெரிவிக்காமல் இருப்பதன் மூலமும், கருக்கலைப்பு செய்யும் டாக்டர்கள், தாய்க்கு உடல் ரீதியான பிரச்சினை இருந்தால் மட்டுமே கருக்கலைப்பு செய்வது என உறுதியாக இருப்பதன் மூலமும் குழந்தைகளின் உயிரை காப்பாற்றுவதுடன், குழந்தைகள் பாலின விகிதத்தை சமன் செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.