முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடைத்தேர்தல் வரும் என்று கூறுவதா? சிவசேனா கண்டனம்

புதன்கிழமை, 19 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

மும்பை, நவ.20 - மகாராஷ்டிராவில் விரைவில் இடைத்தேர்தல் வரும் என்று தேசியவாத கட்சித்தலைவர் சரத் பவார் கூறியிருப்பதற்கு சிவசேனா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா அரசியலில் நிலவும் நிலையற்ற தன்மையைப் பயன்படுத்தி அரசியல் லாபம் காண சரத்பவார் முயல்வதாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க வெளியிலிருந்து ஆதரவு தருவதாக கூறிவிட்டு, அதனைத் திரும்பப் பெறுவதாக மிரட்டுவதன் மூலம் பவார் அரசியல் ஆதாயம் தேட முற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள சிவசேனா, தங்கள் கட்சி எந்த நிலையிலும் நேர்மையாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து