முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாரதா மோசடி தொடர்பு நிரூபித்தால் ராஜினாமா: மம்தா

புதன்கிழமை, 19 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - முதல்வர் பதவியை ராஜிமானா செய்தால் சாரதா சிட்பண்ட் மோசடியுடன் தொடர்பு இருப்பது உறுதியாகி விடும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இத்தகைய சூழலில் டெல்லி வந்திருந்த மம்தா பானர்ஜி அங்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோரை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
முதல்வர் பதவியை ராஜினாமா செய்தால் சாரதா சிட்பண்ட் மோசடியோடு எனக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு உண்மை என்று ஆகிவிடும். மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு எந்த ஆதரவும் கிடையாது. இவை அனைத்தும் மீடியாக்களால் வளர்த்து விடப்படும் கட்டுக்கதைகள் ஆகும். மேற்கு வங்கத்தில் பாஜகவால் எதுவும் செய்ய முடியாது. எல்லை விவகாரம் என்பது மாநிலத்தின் பிரச்சினை அல்ல. இடதுசாரிகள் ஆட்சியில் காங்கிரஸ் ஆட்சியில் சாரதா மோசடி நடந்திருக்கலாம். எனது ஆட்சியில் இல்லை. மத்திய அரசு நிரூபிக்கட்டும். பின்னர் நான் ராஜினாமா செய்கிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து