முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொலை செய்யப்பட்ட நிர்வாகியின் குடும்பத்திற்கு இரங்கல்

புதன்கிழமை, 19 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - தென் சென்னை, தெற்கு மாவட்டம் விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜெயலலிதா பேரவை செயலாளர் படுகொலை செய்யப்பட்டதற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளதோடு அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள மற்றொரு அறிக்கையில் உடல்நலக்குறைவால் மரணமடைந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றிய கழக அதிமுக நிர்வாகியின் மறைவுக்கும் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்,
தென் சென்னை, தெற்கு மாவட்டம், விருகம்பாக்கம் பகுதி 128வது வட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் புல்லட் விஸ்வநாதன் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். இந்த படுகொலைக்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்வதுடன், இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு முறையான தண்டனை பெறுவதி உறுதி. அன்பு சகோதரர் விஸ்வநாதனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன் அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள மற்றொரு அறிக்கையில்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றிய கழக செயலாளர் ஜி.ஆர். நாராயணசாமி உடல் நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். அ.தி.மு.க. கழகத்தின் மீதும், கழக தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு ஆரம்ப காலம் முதல் கழக பணியாற்றி வந்த அன்பு சகோதரர் நாராயணசாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து