முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - வைகை பழைய பாசனப் பகுதிகள் 3 மற்றும் 2-க்கு வைகை அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவதுஎ:
மதுரை மாவட்டம், வைகை அணையிலிருந்து, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை பழைய பாசனப் பகுதிகள் 3 மற்றும் 2-க்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு விவசாய பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை பழைய பாசனப் பகுதிகள் 3 மற்றும் 2-க்கு வைகை அணையிலிருந்து 21.11.2014 முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்படுகிறது.
இதனால், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 1,09,620 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்" இவ்வாறு முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து