முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியாறு அணைக்கு மத்திய பாதுகாப்பு கேட்டு தமிழகம் மனு

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பைக் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ள தாவது:
முல்லைப் பெரியாறு அணை யில் நீர் மட்டத்தை உயர்த்துவதற்கு கேரளம் பலவிதங்களிலும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த நவம்பர் 17-ம் தேதி கேரளத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் சில கேரளப் பத்திரி கையாளர்களுடன் அனுமதி யின்றி முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிட வந்துள்ளார். அவரைத் தடுக்க முயன்ற பொறியாளருடன் கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளனர். எம்.எல்.ஏ.வின் பாதுகாப்புக்கு வந்த கேரள போலீஸாரும் இந்தச் செயலைத் தடுக்க முன் வரவில்லை.
ஆகவே, அணையின் பாது காப்பு கருதி அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
கேரளத்தில் முல்லை பெரி யாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுவதைத் தடுப்பது தொடர்பாக விவாதிக்க வரும் 26-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை நீரைத் தேக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், அதற்கு கேரள அரசு ஆட்சேபம் தெரிவித்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டவுள்ளது. இந்நிலையில், நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த, மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து