முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா முதல்வராக மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை ஓதுவார்களின் இசைவேள்வி

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

மதுரை - ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி மேயர் ராஜன்செல்லப்பா ஏற்பாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை காலை முதல் இரவு வரை 105 ஓதுவார்களின் தொடர் இசைவேள்வி நடக்கிறது.
அதிமுக பொதுச்செயலாளரும்,மக்களின் முதல்வருமான ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வேண்டியும், தமிழக மக்களை பாதுகாக்க வேண்டியும், மதுரை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் சார்பில் மேயர் ராஜன்செல்லப்பா ஏற்பாட்டின் பேரில் மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலில் நாளை 105 ஓதுவார்களின் தொடர் இசைவேள்வி நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஓதுவார்கள் 105 பேர் மதுரைக்கு வரவழைக்கப்பட்டு மிகச்சிறப்பாக மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த இசைவேள்வியை நடத்துகிறார்கள். நாளை சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு இந்த தொடர் இசை வேள்வி தொடங்குகிறது.இந்த வேள்வியில் பங்கேற்க உள்ள ஓதுவார்கள் தொடர்ந்து இரவு 8 மணி வரை இந்த இசை வேள்வியை நடத்துகிறார்கள். அப்போது பல்வேறு சிறப்பு பூஜைகளும்,ஆராதனைகளும் நடத்தப்படுகிறது. இதில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்.முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ, ஏ.கே.போஸ் எம்.எம்.ஏ மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு வழிபடுகிறார்கள்.
இந்த தொடர் இசைவேள்விக்கான ஏற்பாடுகளை மேயர் ராஜன்செல்லப்பா தலைமையில் மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் செய்து வருகிறார்கள்.
==================

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து