முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகி நீக்கம்

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய மேல்கொட்டாவூர் அ.தி.மு.க கிளை செயலாளர் அப்பதவியிலிருந்து நீக்கி அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த மேல்கொட்டாவூர் கிளைக் கழக செயலாளர் எம்.பெரியசாமி இன்று முதல் அ.தி.மு.க கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிளார். மேலும் கழக உடன் பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து