முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹான்டுரஸ் நாட்டு அழகி சுட்டுக் கொலை

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

தெகுடிகால்பா - ஸ் வேர்ல்டு போட்டியில் பங்கேற்க இருந்த ஹான்டுரஸ் நாட்டு அழகி, தனது சகோதிரியுடன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இது தொடர்பாக சகோதரியின் காதலன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உலக அழகி போட்டியில் ஹான்டுரஸ் நாட்டின் சார்பில் மிஸ் ஹான்டுரஸ் 2014 அழகி மரியா ஜோஸ் ஆல்வராடோ(19) கலந்து கொள்வதற்கு லண்டன் செல்வதற்காக விமான டிக்கெட் எடுத்திருந்தார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மரியா ஜோசும் அவரது அக்கா சோபியா டிரினிடாட்டும் சான்டா பார்பரா நகரில் நடந்த சோபியாவின் காதலன் அன்டோனியாவின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டனர். பார்ட்டி முடிந்து அங்கிருந்து தங்கள் வீட்டுக்கு புறப்பட்டனர். அதன்பிறகு இருவரும் மாயமானார்கள்.
இதுகுறித்து மரியாவின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர். அழகியை யாராவது கடத்தியிருக்கலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சான்டா பார்பரா நகரில் உள்ள காட்டுப்பகுதியில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இருவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இது தொடர்பாக சோபியாவின் காதலன் அன்டோனியா உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பிறந்த நாள் பார்ட்டியில் வேறொரு ஆணுடன் சோபியா நடனமாடியதாகவும் இதைத் தொடர்ந்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த ஆன்டோனியா தனது காதலி சோபியாவையும், தடுக்க முயன்ற மரியாவையும் சுட்டுக்கொன்றதாக போலீசார் கூறுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து