எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி - 36 ஆண்டுகளுக்குப் பின் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று அதிகாலை 2 மணியளவில் விவசாயிகளின் கனவு இலக்கான 142 அடியை தொட்டது. இவ்வாறு நீர்மட்டம் உயர்ந்ததை தேனி மாவட்ட விவசாயிகள் மற்றும் அதிமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதாக கூறி நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட் கடந்த மே மாதம் அனுமதியளித்தது. இதையடுத்து கடந்த அக்டோபர் 31ஆம் தேதி நீர்மட்டம் 136 அடியை தாண்டியநிலையில், 20 நாட்களுக்குப் பிறகு தற்போது நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்துள்ளது.
இத்தகவலை உறுதிசெய்த தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள், சரியாக அதிகாலை 2.30 மணியளவில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்ததாக தெரிவித்தனர். அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 400 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதாகவும் ஆனால் கூடுதலாக தண்ணீர் வெளியேற்றப்படுவதாகவும் பொதுப்பணித்துளை அதிகாரிகள் கூறினர்.
அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்ததையடுத்து, 3 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்குமாறு இடுக்கி மற்றும் தேனி மாவட்ட கலெக்டர்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.
காவிரி பிரச்சினையில் நடுவர் மன்ற இறதி தீர்ப்பை கெஜட்டில் வெளியிடுவதற்காக அதிமுக பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதா பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி அதில் மகத்தான வெற்றி கண்டார். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி கெஜட்டில் வெளியிடப்பட்டது. இது தனது 30 ஆண்டு கால அரசியல் வாழ்வில் தனக்குகிடைத்த மாபெரும் வெற்றி மற்றும் சாதனை என்று ஜெயலலிதாவே ஒரு பேட்டியில் பெருமிதத்தோடு குறிப்பிட்டார். அதன் பிறகு என்எல்சி பிரச்சினையிலும் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சி வெற்றி பெற்றது. இப்படி அடுக்கடுக்கான வெற்றிகளை பெற்று சாதனை படைத்த ஜெயலலிதா, முல்லைப் பெரியாறு அணை நீர்மட்ட விஷயத்திலும் பல்வேறு சட்டப் போராட்டங்களை மேற்கொண்டார். அதை தொடர்ந்து கடந்த 2006ம் ஆண்டு இந்த அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ள சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. ஆனால் அதை கெடுக்கும் விதமாக அணை பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் கேரள அரசு ஒரு சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது. இதையும் எதிர்த்து ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அப்போது தமிழகத்தின் தரப்பில் வலுவான ஆதாரங்கள் எடுத்துரைக்கப்பட்டன. இதையடுத்து கடந்த மே மாதம் சுப்ரீம் கோர்ட் இந்த விவகாரத்தில் தீர்ப்பளித்தது.அதாவது, பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம். இதற்கு கேரள அரசு எந்த இடையூறும் செய்யக் கூடாது என்று கடுமையாக உத்தரவிட்டது.இது மக்களின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கிடைத்த மற்றொரு மகத்தான வெற்றியாகும். இதற்காக அவருக்கு மதுரையில் மாபெரும் பாராட்டுவிழாவும் நடத்தப்பட்டது. விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டு ஜெயலலிதாவுக்கு தங்களது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்தனர். இந்த நிலையில் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் பணியில் தமிழக அதிகாரிகள் ஈடுபட்டனர். சில வாரங்களுக்கு முன்னர் அணையின் ஷட்டர்கள் இறக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பயனாக 36 ஆண்டுகளுக்கு பிறகு முதலில் 138 அடியை தொட்ட பெரியாறு அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 140 அடியைதொட்டது.அதன் பிறகு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்ததை அடுத்து நேற்று அதிகாலை 2.30 மணியளவில் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் தமிழக மக்களின் இலக்கான 142 அடியை தொட்டது. இதன் மூலம் தென் மாவட்ட விவசாயிகள் மற்றும் தென் மாவட்ட மக்களின் நீண்ட கால கனவு நிறைவேறி உள்ளது. இந்த கனவை நனவாக்க பெரிதும் உதவியவர் மக்களின் முதல்வர் ஜெயலலிதாதான் என்று விவசாயிகள் மனமார பாராட்டிவருகிறார்கள். காரணம், பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி காவிரி பிரச்சினையில் வெற்றி கண்டதை போல முல்லை பெரியாறு பிரச்சினையிலும் வெற்றி கண்டிருக்கிறார் ஜெயலலிதா. இதை ஒவ்வொரு விவசாயியும் சொல்லிச் சொல்லி பெருமைப்படுகிறார்கள். 142 அடியை பெரியாறு அணையின் நீர்மட்டம் தொட்டதன் மூலம் பல லட்சம் ஏக்கர் பயிர்கள் பலனடையும் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. தென் மாவட்ட மக்களின் வயிற்றில் பால்வார்த்த ஜெயலலிதாவுக்கு விவசாயிகளும், பொதுமக்களும் தங்களது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து வருகிறார்கள். அது மட்டுமின்றி பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தினர். இந்த அணையை தனது சொத்துக்களையே விற்று கட்டியவர் ஆங்கிலேய பொறியாளர் கர்னல் பென்னிகுவிக். அவருக்கு தேனி மாவட்டத்தில் நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நினைவாலயம் தற்போது வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. இந்த அணை கட்டப்பட்டதற்கே பென்னிகுவிக்தான் காரணம். அதனால்தான் அவருக்கு நினைவாலயம் அமைத்தார் ஜெயலலிதா. இதனிடையே பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக எட்டியதை கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் அதிமுகவினரும் அதை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிவருகிறார்கள். அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்ததற்கு மூல காரணம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவே. இந்த அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்துவேன். அது வரை ஓய மாட்டேன் என்று ஒரு முறை மக்களின் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டது இங்கே நினைவுகூரத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 6 hours ago |
பெப்பர் சிக்கன்6 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமானவரித்துறை அனுப்பியது
29 Mar 2024புது டெல்லி, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.
-
சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
29 Mar 2024சென்னை, சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டி அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் : கோவையில் கனிமொழி பிரச்சாரம்
29 Mar 2024கோவை : போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். பா.ஜ.க. பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என தி.மு.க.