முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தவறு செய்யும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை: அமைச்சர்

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - தவறு செய்யும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அறிவுறுத்தினார்.
இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் "தோப்பு என்.டி. வெங்கடாச்சலம்""
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உயர் அதிகாரிகள் கூட்டத்தினை
தலைமைச் செயலகத்தில் நடத்தினார். மேலும் தமிழ்நாடு மாசு
கட்டுப்பாடு வாரிய மண்டல அலுவலகங்களின் செயல்பாடுகள் மற்றும் மண்டல
வாரியாக வாரியம் சந்தித்து வரும் முக்கிய பிரச்சனைகள் குறித்தும் ஆய்வு நடத்தி
அறிவுரைகள் வழங்கினார். சுற்றுச்சூழலை பாதிக்கும் நீர் மற்றும் காற்று மாசு குறித்த
புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், தவறு செய்யும்
தொழிற்சாலைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து