முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாமக நிறுவனர் ராமாஸ் மீது குற்றவியல் அவதூறு வழக்கு

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - பாமக நிறுவனர் ராமதாஸ் மீது தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் காமராஜ் சார்பில் சென்னை மாநகர அரசு வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: கடந்த 17-ஆம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டார். அந்த செய்தி ஒரு மாலை நாளிதழில், பருப்பு கொள்முதலில் ரூ.730 கோடி இழப்பு என்ற தலைப்பில் வெளியானது.
இந்தக் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது, உண்மைக்குப் புறம்பானது. இது உணவுத் துறை அமைச்சர் காமராஜின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. அதனால், குற்றவியல் அவதூறுச் சட்டத்தின் கீழ் ராமதாஸ் மீது நவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து