முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலில் காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் தான் பேச்சு: நவாஸ்

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் - இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் முன் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுடன் பாகிஸ்தான் அரசு பேச்சு நடத்தும் என்று அந்நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டப்பேரவையில் அவர் பேசியதாவது,
காஷ்மீர் விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும் என்று பாகிஸ்தான் நம்புகிறது. அதனடிப்படையிலேயே இந்தியாவுடன் எனது அரசு பேச்சுவார்த்தையை தொடங்கியது. ஆனால் இரு நாடுகளின் வெளியுறவு செயலர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்து விட்டது. இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னதாக காஷ்மீர் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வு காண்பதற்கு பேச்சுவார்த்தையை தொடங்குமாறு இந்தியாவை சர்வதேச நாடுகள் வலியுறுத்த வேண்டும்.
எல்லை பகுதியில் இந்திய ராணுவம் அண்மையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்தனர். இரு நாடுகள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கை இந்தியா அத்துமீறி நடத்தி வரும் தாக்குதலால் பாதிக்கப்படுகிறது. காஷ்மீர் விவகாரத்தை உலக அளவில் அனைத்து அமைப்புகளிலும் பாகிஸ்தான் எழுப்பி வருகிறது. இது தொடர்பாக ஐ.நா. சபையின் கவனத்துக்கு பாகிஸ்தான் கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு சென்றது. காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. சபையும், சர்வதேச நாடுகளும் அமைதி காப்பது கவலையளிக்கிறது. ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானங்களின்படியும், காஷ்மீர் மக்களின் விருப்பப்படியும் இந்த விவகாரத்துக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி நடைபெறவிருந்தது. இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னதாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் சந்தித்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்திய அரசு பாகிஸ்தானுடனான வெளியுறவு செயலர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையை ரத்து செய்தது. பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டுமானால் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமா? அல்லது காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமா? என்பதை பாகிஸ்தான் முதலில் முடிவு செய்ய வேண்டும் என்று இந்தியா கண்டிப்புடன் தெரிவித்தது. இந்த நிலையில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுடன் முதலில் பேசுவோம் என்று நவாஸ் ஷெரீப் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து