முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி தேர்தல்: பா.ஜ.க.வில் ‘சீட்’ பெற போட்டி

சனிக்கிழமை, 22 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட கடும் போட்டி நிலவுகிறது. மூன்று தொகுதிகளில் இருந்து 800 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
ஆம் ஆத்மியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி யடைந்த சிலருக்கு மறு வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
டெல்லி மறுதேர்தலில் மோடி அலை கைகொடுக்கும் என அக்கட்சியினர் நம்புகின்றனர். இதையடுத்து, வேட்பாளரா வதற்காக அக்கட்சியினரிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இது குறித்து பாஜக நிர்வாகிகள் கூறும் போது, “ ஹர்ஷ்வர்தன் உட்பட எம்எல்ஏக்களாக இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பேரின் தொகுதியில் போட்டி யிட பலரும் ஆர்வம் காட்டுகின் றனர். அந்த 3 தொகுதிகளில் மட்டும் 800 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த எம்.பி. தொகுதிகளில் கடந்த முறை போட்டியிட்டவர்களை விட்டுவிட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்றனர்.
ஆம் ஆத்மி கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டு பேர் இம்முறை போட்டியிடவில்லை. எனவே, 10 தொகுதிகளில் புதிய வேட்பாளர்களை களமிறக்க ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து