முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக அரசை கண்டித்து மறியல்: வைகோ கைது

சனிக்கிழமை, 22 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

தஞ்சை - தஞ்சையில் ரயில் மறியலில் ஈடுபட்ட மதிமுக செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார். மேலும் அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 3000 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை, திருவாரூர், நாகையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும், 3 மாவட்டங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டனர்.
மதிமுக பொது செயலாளர் வைகோ தலைமையில் அவரது ஆதரவாளர்கள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் நேற்று காலை தஞ்சையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் மறியல் போராட்டத்தை தொடர்ந்து வைகோ உள்பட 3000 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து