முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் அரசியலில் இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா

சனிக்கிழமை, 22 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

கொழும்பு - இலங்கையில் தொடர்ந்து 2 முறை அதிபர் பதவி வகித்தவர் சந்திரிகா பண்டாரநாயகா குமாரதுங்கா. இவர் தனது அதிபர் பதவி முடிந்ததும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். அவரை தொடர்ந்து சந்திரிகா குமாரதுங்கேவின் இலங்கை சுதந்திர கட்சி சார்பில் புகுந்த ராஜபக்சே அதிபரானார். இவரும் 4வது முறை அதிபராக உள்ளார். இவரது பதவிக்காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன.
ஆனால் அவரது செல்வாக்கு சரிந்து வருவதால் முன்கூட்டியே அதிபர் தேர்தல் நடத்துகிறார். அதை தொடர்ந்து அங்கு வருகிற ஜனவரி 8ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 9 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரிகா குமாரதுங்கே மீண்டும் அரசியலுக்கு வருகிறார். இத்தகவலை நேற்று முன்தினம் அவரே தெரிவித்தார். நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் ராஜபக்சே 3வது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பொது வேட்பாளராக மைத்ரிபாலா ஸ்ரீசேனாவை எதிர்க்கட்சிகள் நிறுத்துகின்றன. இவர் ராஜபக்சே அமைச்சரவையில் மந்திரி பதவி வகித்து தற்போது வெளியேறி உள்ளார். வரும் தேர்தலில் சந்திரிகா போட்டியிடவில்லை. ஆனால் பொது வேட்பாளரான மைத்ரி பாலா ஸ்ரீசேனாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து நிருபர்களிடம் சந்திரிகா கூறியதாவது,
9 ஆண்டுகளுக்கு பிறகு எனது மவுனத்தை கலைக்கிறேன். ராஜபக்சே எனது கட்சியை அழித்து வருகிறார். அதை காக்கவே நான் மீண்டும் அரசியலுக்கு வருகிறேன். எனது இந்த முடிவுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியலுக்கு சென்றால் ராஜபக்சே உங்களை கொன்று விடுவார் என்று எனது மகன் கூறினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து