முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்ட்ரல் குண்டு வெடிப்பில் 6 சிமி இயக்க தீவிரவாதிகளூக்கு தொடர்பு

சனிக்கிழமை, 22 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - நிலையில் சென்ட்ரல் வெடிகுண்டு சம்பவத்தில் ஈடுபட்டது சிமி இயக்கத்தை சேர்ந்த 6 பேர் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்..பெங்களூரில் இருந்து புறப்பட்டு வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நின்ற போது 2 பெட்டிகளில் குண்டு வெடித்தது.இதில் ஆந்திராவை சேர்ந்த ஒரு பெண் பயணி பலியானார். 40–க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.இந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சம்பவத்தன்று கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக சென்னை வந்தது. அதனால் சதி செயலில் ஈடுபட்ட கும்பல் சென்னையை மையமாக வைத்து செயல்படுத்தவில்லை எனவும் அன்றைய தினம் ஆந்திராவில் மோடி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுவதாக இருந்தது. அவருக்கு வைக்கப்பட்ட குறி என்றும் விசாரணையில் தெரிய வந்தது.
வழக்கமான நேரத்தை விட கவுகாத்தி எக்ஸ்பிரஸ் தாமதமாக வந்ததால் குண்டுகள் சென்ட்ரல் நிலையத்தில் வெடித்துள்ளதாக புலன் விசாரணையில் தெரிந்தது.ரெயிலில் வெடிகுண்டுகளை குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்க செய்து மோடி பிரசார கூட்டத்தை முடக்க செய்வதற்காக இந்த சதி திட்டம் தீட்டப்பட்டு இருக்கலாம் என்று கருதப்பட்டது.ஆனால் இந்த சதி திட்டத்தில் ஈடுபட்டது எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் சென்ட்ரல் வெடிகுண்டு சம்பவத்தில் ஈடுபட்டது சிமி இயக்கத்தை சேர்ந்த 6 பேர் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். மத்திய பிரதேசத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகளும் கடந்த 2013–ம் ஆண்டு செப்டம்பர் 30–ந்தேதி கான்வா சிறையில் இருந்து தப்பி உள்ளனர்.
சிமி அமைப்பை சேர்ந்த அம்ஜட், அஸ்லாம், ஜாகீர், மெகபூப், எஜாதின், அபுபைசல் ஆகியோர் சிறையில் டிரில்லர் மூலம் ஒட்டை போட்டு தப்பி உள்ளனர். சிறையில் இருந்து தப்பி தலைமறைவாகி உள்ள 6 பேரும் ரெயிலில் டைம்பாம் வைத்து நாச வேலையில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.இந்த கும்பல் ஆந்திராவில் உள்ள வங்கியை உடைத்து கொள்ளை அடித்து பிடிபட்டதாகும். ஏற்கனவே உத்தரபிரதேசத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்திலும் ஈடுபட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டு வைப்பதற்கு முன்னதாக 4, 5 முறை அந்த ரெயிலில் பயணம் செய்து எப்படி குண்டு வைக்கலாம் என சோதனை செய்துள்ளனர்.சிமி இயக்கத்தை சேர்ந்த 6 பேரையும் பிடிக்க தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் புதிய வியூகம் வகுத்துள்ளனர். அவர்கள் செயல்பாட்டை பிற மாநில போலீஸ் உதவியுடன் கண்காணித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து