முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா முதல்வராக தல்லாகுளம் பெருமாள் கோயிலில் திருமஞ்சன பூஜை

சனிக்கிழமை, 22 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

மதுரை - அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக வேண்டி மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் திருமஞ்சன பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அதிமுக பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக மீண்டும் வர வேண்டி மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பல்வேறு கோயில்களில் விசேஷ பூஜைகளும், தேவாலயங்களில் வழிபாடுகளும், பள்ளிவாசல்களில் தொழுகைகளும், திருவிளக்கு பூஜைகளும், முளைப்பாரி வைபவங்களும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் நேற்று திருமஞ்சன பூஜை நடத்தப்பட்டது. மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூர் கே. ராஜூ இந்த பூஜையை முன்னின்று நடத்தினார். இதில் பட்டர்கள் கலந்து கொண்டு திருமஞ்சன பூஜையை நடத்தினர். பின்னர் விசேஷ ஆராதனைகளும் அபிஷேகங்களும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தல்லாகுளம் பெருமாள் கோயில் முன்பு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பக்தர்களுக்கு அமைச்சர் செல்லூர் கே. ராஜூ அன்னதானம் வழங்கினார். இதனை தொடர்ந்து பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள தேவாலயத்தில் மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார், மேயர் ராஜன் செல்லப்பா, கோபாலகிருஷ்ணன் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே. போஸ், கே. தமிழரசன், சுந்தர்ராஜன், துணை மேயர் கு. திரவியம், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ். பாண்டியன், மாவட்ட நிர்வாகிகள் புதூர் துரைபாண்டி, சி. தங்கம், வில்லாபுரம் ஜெ. ராஜா, மண்டல தலைவர்கள் பெ. சாலைமுத்து, கே. ஜெயவேல், கே. ராஜபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. வி.ஆர். ராஜாங்கம், அணி செயலாளர்கள் எஸ்.டி. ஜெயபாலன், கா. டேவிட் அண்ணாதுரை, பெ. இந்திராணி, ஏ. ராஜீவ்காந்தி, கே. ரமணி, டி. வினோத்குமார், பகுதி கழக செயலாளர்கள் அண்ணாநகர் எம்.என். முருகன், வி.கே.எஸ். மாரிச்சாமி, ஏ.கே. முத்து இருளாண்டி, பூமிபாலகன், நிர்வாகிகள் ஜி.என். அன்பு செழியன், சோலைராஜா, பொதுக்குழு உறுப்பினர்கள் அண்ணாநகர் முனியசாமி, வி.எஸ். முத்துராமலிங்கம், சண்முகவள்ளி, எல்லீஸ் நகர் ஏ. இந்திரா, கவுன்சிலர்கள் புதூர் அபுதாஹீர், கேசவ பாண்டியம்மாள், குமுதா, கண்ணகி பாஸ்கரன், தங்கபாண்டியன், வீரணன், ராணிபோஸ் மற்றும் கே.வி.கே. கண்ணன், ஆறுமுகம், எஸ்.ஐ. கணேசன், தல்லாகுளம் மோகன்குமார், கே.எம். கண்ணன், முத்துசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து