முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிப்டில் சிக்கி தவித்த பிரித்விராஜ்: வீரர்கள் மீட்டனர்

ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

மும்பை - மகாராஷ்டிர மாநில் முன்னாள் முதல்வர் பிரித்திவிராஜ் லிப்டில் சிக்கி தவித்தார். அவரை தீ அமைப்பு வீரர்கள் விரைந்து சென்று கதவை உடைத்து மீட்டனர்.
மகாராஷ்டிராவில் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமாக இருப்பவர் பிரித்விராஜ் சவான். இவரது அலுவலகம் மும்பை தெற்கு பகுதியில் உளஅள ரவீந்திர மேன்சன் என்ற இடத்தில் அமைந்துள்ளது. நேற்று முன் தினம் காங்கிரஸ் பொது செயலாளர் சஞ்சய் தத்துடன், பிரித்விராஜ் சவான் தனது அலுவலகத்திறகு சென்றார்.
அப்போது லிப்டில் ஏறி தங்களது அலுவலகம் அமைந்துள்ள தளத்திற்கு சென்றனர். பின்னர் தளத்திறகு சென்றதும் லிப்டை திறப்பதற்காக பட்டனை அழுத்திய போது அது வேலை செய்யவில்லை. இதனையடுத்து கோளாறு காரணமாக கதவு திறக்க முடியாமல் மூடிக்ககொண்டது. பிரித்விராஜ் சவானும், சஞ்சய தத்தும் லிப்டுக்குள் சிக்கிக் கொண்டனர். உடனடியாக அவசர அலாரத்தை ஒலிக்கச் செய்தனர். உடனடியாக ஊழியர்கள் விரைந்து வந்தனர்.
அங்கு லிப்டு கோளாறு காரணமாக கதவுகள் மூடிக் கொண்டதால் பிரித்விராஜும், தத்தும் உள்ளே சிக்கிக் தவிப்பதை கண்டனம். அவர்கள் லிப்டின் கதவை திறக்க முயற்சி செய்து முடியாமல் போகவே உடனடியாக தீ அணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீ அணைப்பு படையினர் லிப்டின் கதவை உடைத்து பிரித்விராஜ் சவானையும், தத்துவையும் மீட்டனர். சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக இரண்டு பேரும் லிப்டில் சிக்கி தவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து