எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்ட 14 மீனவர்கள் உள்பட 38 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல பறிமுதல் செய்யப்பட்டு இருக்கும் 78 படகுகளையும் தமிழக மீனவர்களிடம் திரும்ப ஒப்படைக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
ஜெயலலிதா ஏற்கனவே அறிவுறுத்தியபடி மீனவர்கள் நலன்களுக்காக மத்திய அரசு ரூ. 1,520 கோடி நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் கடல் ஆழத்தை பராமரிக்க ஆண்டுக்கு ரூ.10 கோடி தொடர் மான்யம் வழங்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில்,நேற்று முன் தீனம்ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் ஆகிய மீன்பிடி தளங்களிலிருந்து 3 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள மற்றொரு சம்பவம் குறித்து அவரின் கவனத்திற்கு கொண்டு வர இக்கடிதத்தை எழுதுவதாக தெரிவித்துள்ளார்.
பிடிபட்ட மீனவர்கள், அவர்களது படகுகளுடன் இலங்கையில் உள்ள காங்கேசன் துறைக்கு கொண்டு செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் முதலமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.
போதைப் பொருள் கடத்தியதாக பொய் வழக்கு புனையப்பட்டு இலங்கை அரசால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்கள், கடந்த 20-ம் தேதி விடுதலை செய்யப்பட்ட ஆக்கப்பூர்வமான நிகழ்வைத் தொடர்ந்து, இந்த சம்பவம் நடந்திருப்பது துரதிர்ஷ்டவசமானதாகும்.
- இந்த 5 மீனவர்களும் கடந்த 2011-ம் ஆண்டு கைது செய்யப்பட்டது முதல், அவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி, எங்களின் தலைவி புரட்சித்தலைவி அம்மாவின் ஆணைக்கிணங்க, தமிழக அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்திருப்பதை பிரதமர் அறிவார் என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், எங்கள் தலைவியின் அறிவுரைக்கிணங்க தமிழக அரசு, 5 மீனவர்களின் தரப்பில் வாதாட வழக்குச் செலவு அனைத்தையும் ஏற்றுக்கொண்டதுடன், மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதிலிருந்து அவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கி ஆதரவு அளித்தது என்பதையும் நினைவு கூர்ந்துள்ளார்.
5 மீனவர்களுக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதாக கடந்த மாதம் 30-ம் தேதி தகவல் கிடைத்தவுடன், இந்த அப்பாவி மீனவர்களை காப்பாற்றி, அவர்களை கூடிய விரைவில் தாயகம் திருப்பி அனுப்ப மத்திய அரசு இலங்கை அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு, பிரதமரை வலியுறுத்தியதையும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், 5 மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யவும், அவர்களுக்காக சிறந்த வழக்கறிஞரை வைத்து வாதாடவும், இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு உத்தரவிடுமாறும் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது – 5 மீனவர்களின் தரப்பில் வாதாட வழக்குச் செலவுக்காக 20 லட்சம் ரூபாயையும் தமிழக அரசு அனுமதித்தது. – தமிழக அரசின் கோரிக்கையை அடுத்து பிரதமர் இப்பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை மேற்கொண்டதன் பேரில், இந்த 5 மீனவர்களும் கடந்த 20-ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர் – பிரதமர் உரிய நேரத்தில் தலையிட்டு நடவடிக்கை மேற்கொண்டதற்காக தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் நேற்றைய தினம் நடந்துள்ள சம்பவம், தமிழக மீனவர்கள் பாக். ஜலசந்தியில் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடிக்கும்போது அவர்களை துன்புறுத்துவது, மிரட்டுவது போன்ற வழக்கமான நடவடிக்கைகளில் இலங்கை அதிகாரிகள் மீண்டும் ஈடுபட்டுள்ளதையே எடுத்துக் காட்டுகிறது.
நேற்று கைது செய்யப்பட்ட 14 மீனவர்கள் தவிர, தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 24 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் 2 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு அந்நாட்டில் காவலில் உள்ளனர் என்பதையும் பிரதமருக்கு நினைவுபடுத்த விரும்புவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமைதியான முறையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவந்த இந்திய மீனவர்களை அடுத்தடுத்து கைது செய்து, துன்புறுத்திய சம்பவங்கள் மற்றும் மீனவர்களின் மீன்பிடி படகுகளை விடுவிக்காமல் வைத்துள்ள இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற தவறான அச்சுறுத்தும் வகையிலான நடவடிக்கைகளை ஏற்கெனவே, எங்களது மதிப்புமிக்க தலைவர் புரட்சித் தலைவி அம்மா, பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
- இதன் காரணமாக, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமும், அவர்களின் குடும்பத்தினரும் தற்போது மிகமோசமாக பாதிப்படைந்துள்ளனர் – நேற்று சிறைபிடிக்கப்பட்டுள்ள 3 படகுகள் மட்டுமல்லாமல், தமிழக மீனவர்களின் 75 படகுகள் இலங்கையின் கட்டுப்பாட்டில் தொடர்ந்து இருந்துவருவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படை வாழ்வாதாரத்தை
இழந்து தவிப்பு
தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்காமல் இருக்கும் இலங்கை அரசின் செயல்பாடு, தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது – அடிப்படை வாழ்வாதாரத்தை மீனவர்கள் இழந்திருப்பதுடன், மிகுந்த மனத் தளர்வுக்கும் ஆளாகியுள்ளனர். – இந்த பிரச்சினையை இலங்கை அரசின் உயர்மட்ட அளவில் கொண்டு சென்று, வடகிழக்கு பருவமழையால் மிக மோசமாக பாதிப்புக்குள்ளாகி, அந்நாட்டில் பாதுகாப்பற்ற முறையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகுகளை உடனடியாக மீட்டுத்தர பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஏறக்குறைய 10 லட்சம் மீனவ குடும்பத்தினர் கடல் மீன்பிடி தொழில் ஒன்றையே தங்களின் வருவாய்க்கான வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். - தமிழக அரசு, கடலோர சுற்றுச்சூழல் நெருக்கடிகளைக் குறைத்து, மீனவர்களின் வாழ்க்கைத் தொழிலை விரிவுப்படுத்துவதற்கு தேவையான எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்திருப்பதை, எங்களது தலைவி புரட்சித்தலைவி அம்மா ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளார்.
- மீனவர்களின் தொடர்கதையாகி வரும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தற்போதைய சூழ்நிலையில் இரண்டு விதமான அணுகுமுறைகள் அவசியம். – மீனவர்களின் சமூக பொருளாதார நிலையை நீண்டகால அடிப்படையில் மேம்படுத்துவதற்கு ஏதுவாக, மத்திய அரசிடமிருந்து எங்கள் தலைவர் ஏற்கனவே கோரியுள்ளபடி, ஆயிரத்து 520 கோடி ரூபாய் நிதியுதவிக்கு அனுமதி மற்றும் கடல் ஆழத்தை பராமரிப்பதற்கு ஆண்டு ஒன்றுக்கு 10 கோடி ரூபாய் தொடர் மானியம் அளிப்பது, முதல் அணுகுமுறை – தமிழக மீனவர்கள் தங்களின் பாரம்பரிய – வரலாற்று ரீதியான பாக். நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்க ஏதுவாக கச்சத்தீவை மீட்பதுடன், கச்சத்தீவு குறித்து கடந்த 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்வது இரண்டாவது அணுகுமுறையாகும் என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்ததை எதிர்த்தும், சட்ட ரீதியாக அதனை திரும்ப பெறுவதற்கும் எங்களது தலைவி புரட்சித்தலைவி அம்மா, தனிப்பட்ட முறையிலும், தமிழக அரசின் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
பாக்.ஜலசந்தியில்
மீன்பிடி உரிமை மறுப்பு
- தமிழக மீனவர்களின் பாரம்பரிய கடல் பகுதியான பாக். ஜலசந்திப் பகுதியில் அமைதியான முறையில் மீன் பிடிக்கும் உரிமைகள் மறுக்கப்படுவது, தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. – நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கச்சத்தீவை மீட்கும் பிரச்சினையில் பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, உடனடியாக தீர்வுகாண வேண்டும். – இதன்மூலம், தமிழக மீனவர்களுக்கு பாரம்பரிய பகுதியில் மீன்பிடிக்கும் உரிமை மீண்டும் கிடைக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கையை எங்கள் தலைவி புரட்சித்தலைவி அம்மா ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரச்சினையை உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் அறிவுறுத்துவதுடன், இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்ட 14 மீனவர்களையும், இவர்கள் உட்பட அந்நாட்டு சிறையில் ஏற்கெனவே வாடிவரும் 38 மீனவர்களையும் உடனடியாக விடுவிப்பதை உறுதிசெய்ய வேண்டும் – மேலும், இலங்கை அரசு பிடித்துவைத்துள்ள 78 படகுகளையும் விடுவிக்க பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 6 hours ago |
பெப்பர் சிக்கன்6 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டி அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் : கோவையில் கனிமொழி பிரச்சாரம்
29 Mar 2024கோவை : போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். பா.ஜ.க. பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என தி.மு.க.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
29 Mar 2024சென்னை, சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
-
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமானவரித்துறை அனுப்பியது
29 Mar 2024புது டெல்லி, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
தேர்தல் விதிமீறல் புகார்: நீலகிரியில் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு
29 Mar 2024நீலகிரி, பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
பிரதமர் மோடியுடன் பில்கேட்ஸ் சந்திப்பு: ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை
29 Mar 2024புது டெல்லி, டெல்லியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் பில் கேட்ஸ் நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார்.