முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2016ல் தமிழகத்தில் காங்., தலைமையிலான ஆட்சி: இளங்கோவன்

திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

தஞ்சை - வரும் 2016ல் தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையும் என்று தஞ்சையில் நேற்று காங்கிரஸ் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,
வாசன் தன் தலைமையில் கூட்டணி அமைக்கப்படும். அதில் பல்வேறு கட்சிகள் இடம் பெறும் என்றும் கூறி உள்ளார். தற்கொலை செய்ய நினைப்பவர்கள் அவரது கட்சியுடன் கூட்டணி வைக்கலாம். எங்களுக்கு அதைப்பற்றி கவலை இல்லை. வரும் 2016ல் தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையும். எங்களின் தயவு இல்லாமல் 201 6ல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. தஞ்சை விவசாயிகளுக்காக நாங்கள் எப்போதும் போராட தயார். 29ம் தேதி நடைபெறும் போராட்டத்துக்கு எங்களுக்கு அழைப்பு இல்லை என்றாலும் நாங்கள் கலந்து கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து