முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாமில் ரயிலின் கழிவறையில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு

திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

கவுகாத்தி - அசாம் மாநிலத்தின் கம்ருப் மாவட்டம் வழியாக நேற்று லும்டிங்-கமாக்யா இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் கெண்டுகோனா ரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.
ரயிலில் இருந்த இருப்புப்பாதை பாதுகாப்புப் படை போலீசார், அனைத்து பெட்டிகளுக்கும் சென்று வழக்கமான சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, ஒரு பெட்டியின் கழிவறை வாசலில் ஒரு டவலால் சுற்றிவைக்கப்பட்ட பிளாஸ்டிக் கவரில் இருந்து சில ஒயர்கள் வெளியே நீட்டிக் கொண்டிருந்ததை அவர்கள் கண்டனர். இதனையடுத்து, அந்த டவலை நீக்கிவிட்டு, கவரை எடுத்து, பிரித்துப் பார்த்த போது உள்ளே சுமார் 7 கிலோ எடையுள்ள நவீன ரக வெடிகுண்டு இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து, கெண்டுகோனா ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டரை தொடர்பு கொண்ட போலீசார் உடனடியாக ரயிலை நிறுத்த அனுமதி கேட்டதுடன், உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் குழுவை ரயில் நிற்கும் இடத்துக்கு அனுப்பி வைக்கும்படியும் கூறினர்.
முழு ரயிலையும் சோதனை செய்ய வேண்டும் என்று கூறி பயணிகள் அனைவரையும் கீழே இறக்கிய போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து