முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லை பெரியாறில் மூவர் குழுவினர் நேரில் ஆய்வு

திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

குமுளி - முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதையடுத்து கோர்ட்டு அறிவுரையின் பேரில் 142 அடியாக உயர்த்துவதற்காக மூவர் குழு நியமிக்கப்பட்டது.
இக்குழுவில் தமிழகம் மற்றும் கேரளா சார்பில் அதிகாரிகளும், மத்திய பிரதிநிதியாக ஒருவரும் இடம் பெற்றுள்ளனர்.
மத்திய பிரதிநிதி நாதன் தலைமையில் அமைந்துள்ள இக்குழுவிற்கு உதவும் வகையில் 5 பேர் கொண்ட மேற்பார்வை துணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவினர் 2 வாரத்திற்கு ஒருமுறை அணைப்பகுதியில் பார்வையிட்டு மூவர் குழுவிற்கு அறிக்கை அனுப்புவார்கள்.
அதன்படி அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்து பின்பு முதல் முறையாக மத்திய பிரதிநிதி நாதன் தலைமையிலான மூவர் குழுவினர் நேற்று முல்லை பெரியாறு அணைக்கு வந்தனர். அவர்கள் மெயின் அணை, பேபி அணை, 13 ஷட்டர் பகுதி ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தனர்.
பின்னர் அணையில் இருந்து வெளியேறும் கசிவு நீரையும் அவர்கள் கண்காணித்தனர்.
நேற்று மாலை தேக்கடியில் மூவர் குழு கண்காணிப்பு அலுவலகத்தில் கேரள–தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து