முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - பாக். எல்லையருகே ரூ.25 கோடி ஹெராயின் பறிமுதல்

திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

அமிர்தசரஸ் - பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரோஸ்பூர் மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையருகே சுமார் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயினை இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இங்குள்ள பரேக்கே பகுதி கண்காணிப்பு கோபரத்தில் நேற்று அதிகாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, பாகிஸ்தான் எல்லைப் பகுதியோரம் சில மர்ம நபர்கள் நடமாடுவது இந்திய எல்லை பாதுகாப்புப் படையினருக்கு தெரியவந்தது.
நமது வீரர்களின் எச்சரிக்கையையடுத்து, அவர்கள் இருட்டில் பதுங்கியவாறு பாகிஸ்தானுக்குள் ஓடி விட்டனர். அவர்கள் நடமாடிய இடத்துக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தியபோது 5 கவர்களில் போதைப் பொருளான ‘ஹெராயின்’ கிடப்பது தெரிய வந்தது.
அதை கைப்பற்றிய எல்லை பாதுகாப்புப் படையினர், பிடிப்பட்ட ஹெராயினின் சர்வதேச விலை மதிப்பு சுமார் 25 கோடி ரூபாய் என்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து