எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜன.20 - 5 பல்கலைகளில் 30 கல்லூரிகளில் மென்திறன் பயிற்சி மையங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.1.35 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
ஒரு நாட்டின் உன்னத நிலையை தீர்மானிப்பது இளைஞர்களின் அறிவாற்றல் மற்றும் திறன் ஆகியவை ஆகும். அறிவிற் சிறந்த, திறன் மிக்க சமுதாயத்தை உருவாக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இன்றைய உலகம் கணினி உலகம் என்றே சொல்லலாம். தகவல் தொழில் நுட்பம், மனிதவள மேம்பாடு போன்ற துறைகளில் உருவாகி வரும் வேலை வாய்ப்புக்கு ஏற்றபடி, மாணவ, மாணவியர்களின் திறன் உயர்த்தப்பட வேண்டும். உலகப் பணித்திறன் தொகுப்பு அடையாளப்படுத்தியுள்ள 60 விதமான அடிப்படை மென்திறன்களை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி, அதில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளிப்பதற்காக முதற்கட்டமாக 5 பல்கலைக் கழகங்களின் கீழ் உள்ள 30 கல்லூரிகளில் மென்திறன் மையங்களை, 1 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ், மாநிலக் கல்லூரி, சென்னை, ஸ்ரீ சுப்ரமணியசாமி அரசு கலை கல்லூரி, திருத்தணி, ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக் கல்லூரி, செங்கல்பட்டு, ஆகிய 3 கல்லூரிகளிலும், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, செய்யார், முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி, வேலூர், அரசு திருமகள் மில்ஸ் கல்லூரி, குடியாத்தம், ஏ.கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி, திண்டிவனம், கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி, விருத்தாசலம், அரசுக் கலைக் கல்லூரி, தர்மபுரி, அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பர்கூர் ஆகிய 7 கல்லூரிகளிலும், மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் கீழ், அரசு கலைக் கல்லூரி மேலூர், அரசு மகளிர் கலைக் கல்லூரி, நிலக்கோட்டை, ராமநாதபுரம், அரசு கலைக் கல்லூரி, பரமக்குடி, வி.எஸ்.சிவலிங்கம் அரசு கலைக் கல்லூரி, லாங்குறிச்சி, அரசு மகளிர் கலைக் கல்லூரி, சிவகங்கை ஆகிய 6 கல்லூரிகளிலும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ், அரசு கலைக் கல்லூரி, (தன்னாட்சி), கும்பகோணம், குந்தவை நாச்சியார் மகளிர் அரசு கலைக் கல்லூரி, தஞ்சாவூர், தருமபுரம் ஞானாம்பிகை மகளிர் அரசுக் கல்லூரி, மயிலாடுதுறை, மன்னை ராஜகோபால சுவாமி, அரசு கலைக் கல்லூரி, மன்னார்குடி, அரசு கலைக் கல்லூரி, திருவெறும்ர், திருச்சிராப்பள்ளி, அரசு கலைக் கல்லூரி, அரியலூர், அரசு கலைக் கல்லூரி, தாந்தோணிமலை, கரூர், அரசு மகளிர் கலைக்கல்லூரி, புதுக்கோட்டை ஆகிய 8 கல்லூரிகளிலும், பாரதியார் பல்கலைக் கழகத்தின் கீழ், மகளிர் அரசு கலைக் கல்லூரி, சேலம், திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி, ராசிபுரம், அரசு கலைக் கல்லூரி, உடுமலைப்பேட்டை, எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரி, திருப்ர், அரசு கலைக் கல்லூரி, உதகமண்டலம், ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி, திருநெல்வேலி ஆகிய 6 கல்லூரிகள் என 5 பல்கலைக் கழகங்களின் கீழ் உள்ள 30 கல்லூரிகளில் மென்திறன் மையங்கள் அமைக்கப்படும்.
மேலும், பல்கலைக்கழகங்களுக்கும், சமூகத்திற்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தும் வகையில் தொழில் நுட்பம் அடைகாப்பு மற்றும் பகிர்ந்தளிக்கும் மையங்களை, உயர்கல்வித்துறையின் கீழ் 9 பல்கலைக்கழகங்களில் அமைப்பதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு மையமும் 29.88 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
இந்த மையங்கள், சென்னை பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகிய 9 பல்கலைக்கழகங்களில் நிறுவப்படும்.
இந்த மையங்கள், மாணவர்களிடையே தொழில் முனையும் திறனையும், தொழில் நுட்ப அறிவு, குறிப்பாக தகவல் தொழில் நுட்ப அறிவினை மேம்படுத்துதல், மாணவர்களிடையே எழும் புதுவிதமான யுக்திகளைக் கொண்டு வணிகரீதியான பொருட்களை உற்பத்தி செய்ய மாணவர்களை ஊக்குவித்தல், வருங்காலத்தில் மாணவர்கள் பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், மாணவர்களிடையே, வருங்கால தொழில் முனைவோர்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு பணிகளை செய்யும்.
மேலும், ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் சமூகம் பயன் பெறும் வகையில், இம் மையங்களில் ஆராய்ச்சி வழிமுறைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் பேணி காக்கப்படும். இம் மையங்கள் மூலம் கல்லூரிகிராம தொழில் நுட்ப சங்கங்கள் அமைக்கப்படும்.
அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் மாணவர்களின் அறிவுத் திறன் கண்டறியப்பட்டு, அவைகள் ஊக்குவிப்பத்துடன், மாணவர்களிடையே சமுதாய அர்ப்பணிப்பு உணர்வு ஏற்படுவதற்கு வழிவகை ஏற்படும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமிடவில்லை : பாகிஸ்தான் அமைச்சர் தகவல்
13 May 2025இஸ்லாமாபாத் : காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லை.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு திட்டங்களால் மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டி : தமிழக அரசு பெருமிதம்
13 May 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு திட்டங்களால் மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டியாக உள்ளது என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்து
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : கோவை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
13 May 2025கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு பிரதமர் மோடி திடீர் விசிட் : வீரர்களுடன் கலந்துரையாடி பாராட்டு
13 May 2025புதுடெல்லி : பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, வீரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் துணிச்சலை பாராட்டினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2025
13 May 2025 -
லிபியா தலைநகரில் கடும் மோதல்: 6 பேர் உயிரிழப்பு
13 May 2025வட ஆப்பிரிக்க, வட ஆப்பிரிக்க நாடான லிபியாவின் தலைநகர் திரிப்பொலியில் இரண்டு ஆயுதப் படைகளுக்கு இடையிலான மோதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
-
ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு
13 May 2025பாகிஸ்தான் : இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, எல்லையில் அமைதி நிலவுகிறது.
-
சவுதி பட்டத்து இளவரசருடன் அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு
13 May 2025ரியாத் : அமெரிக்க ஜனாதிபதியாக 2வது முறையாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார்.
-
பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்துக்கு இ.பி.எஸ். பதில்
13 May 2025சென்னை : பொள்ளாச்சி தீர்ப்பு குறித்த முதல்வர் மு.க. ஸ்டாலினின் கருத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் கருத்து கூறியுள்ளார்.
-
ரூ.586.94 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 13 பகுதிகளில் 5,180 அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு : அமைச்சர் தா. மோ. அன்பரசன் தகவல்
13 May 2025சென்னை : 13 திட்டப்பகுதிகளில் 5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படவுள்ளதாக குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ.
-
இந்தியாவுடனான மோதலில் 11 பாக்., வீரர்கள் உயிரிழப்பு
13 May 2025இஸ்லாமாபாத் : மே 7 முதல் 4 நாட்களுக்கு நடைபெற்ற இந்தியாவுடனான மோதலில் தங்கள் ராணுவத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
-
மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளை தி.மு.க. அரசு நிலைநாட்டி வருகிறது : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
13 May 2025சென்னை : மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளை தி.மு.க. அரசு நிலைநாட்டி வருகிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
ஜம்மு -காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
13 May 2025ஜம்மு : ஜம்மு -காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) காலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
-
பாகிஸ்தானுக்கு ஆயுதங்களுடன் விமானம் அனுப்பப்படவில்லை: சீனா திட்டவட்டம்
13 May 2025பீஜிங் : பாகிஸ்தானுக்கு ஆயுதங்களுடன் விமானம் அனுப்பப்படவில்லை என்று சீனா திட்டவட்டமாக தெரிவித்தது.
-
9 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது: மகளிர் உரிமைத் திட்டத்தில் வரும் ஜூன் 4-ம் தேதி விண்ணப்பிக்கலாம்
13 May 2025சென்னை : மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுப்பட்ட பெண்கள் வரும் ஜூன் 4-ம் தேதி விண்ணப்பிக்கலாம்.
-
சி.பி.எஸ்.இ. +2 தேர்வில் 83.39 சதவீதம் பேர் தேர்ச்சி
13 May 2025புதுடெல்லி : சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 83.39 சதவீத மாணவர்க்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
13 May 2025சென்னை : பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது.
-
பாகிஸ்தான் ராணுவத்தின் 51 இடங்களை தாக்கினோம்: பலுசிஸ்தான் விடுதலைப்படை தகவல்
13 May 2025குவெட்டா, பாகிஸ்தானின் தென்மேற்கில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க கோரி பலுசிஸ்தான் விடுதலைப்படை (பிஎல்ஏ) என்ற பெயரில் கிளர்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக
-
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்ற நடந்த முயற்சிகளை தி.மு.க .முறியடித்தது : தீர்ப்பை வரவேற்று துணை முதல்வர் உதயநிதி பதிவு
13 May 2025சென்னை : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்றைக்கு நீதி கிடைக்க தி.மு.க.வே காரணம் என்று பொள்ளாச்சி வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து வழங்கிய தீர்ப்பை வரவேற்று துணை மு
-
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்ச்சியில் சென்னை மண்டலம் 4-ம் இடம்
13 May 2025புதுடெல்லி : சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் வெளியிடப்பட்ட நிலையில், மொத்தம் 93.66 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
-
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாட கொடி யாத்திரை நடத்த பா.ஜ.க. முடிவு
13 May 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியை பாஜக கொண்டாடும் வகையில் நாடு முழுவதிலும் ‘திரங்கா யாத்ரா நடத்துகிறது.
-
அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்க இந்தியா முடிவு
13 May 2025புதுடெல்லி : அமெரிக்க தயாரிப்புகளுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது.
-
எங்களுடைய கூட்டணி வலுவாக இருக்கிறது: 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி கூட்டணி தொடரும் : முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில்
13 May 2025சென்னை : எங்களுடைய கூட்டணி வலுவாக, கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
பஹல்காம் பயங்கரவாதிகள் பற்றி தகவல் அளித்தால் ரூ.20 லட்சம் சன்மானம்
13 May 2025புதுடெல்லி, பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு, ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும்.
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 8 பெண்களுக்கு 85 லட்சம் ரூபாய் இழப்பீடு: சி.பி.ஐ. வழக்குரைஞர்
13 May 2025கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 ல