எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிலை ரூ.213 கோடிக்கு விற்பனை
1920களில் சில கட்டுமான பொறியாளர்கள் சுமார் 2 ஆயிரம் ஆண்டு கால பழமையான சிலை ஒன்றை கண்டெடுத்தனர். இது பண்டைய ரோமானியாவைச் சேர்ந்த பித்தனை சிலை. ஹெலனிஸ்டிக் கால கட்டத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படும் இந்த சிலை மிகுந்த கலை வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டிருந்தது. இந்த சிலை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டது. அடையாளம் தெரியாத ஒருவரால் 28 மில்லியன் டாலருக்கு அதாவது ரூ.213 கோடிக்கு விலைக்கு வாங்கினார்.
டாவின்சியின் குறிப்புகளை ரூ.229 கோடிக்கு வாங்கிய பில் கேட்ஸ்
லியோனார்டோ டாவின்சியின் ஓவியங்கள் மட்டுமல்ல அவர் எழுதி வைத்திருந்த குறிப்புகளுக்கும் அதிக கிராக்கி உண்டு. ஓவியங்கள் வரைவது குறித்த தொழில் நுட்பங்கள் குறித்து டாவின்சி எழுதிய குறிப்புகளை பிரபல தொழில் அதிபர் பில் கேட்ஸ் 30.8 மில்லியன் டாலருக்கு அதாவது ரூ.229 கோடிக்கு வாங்கினார். இந்த குறிப்புகள் வலமிருந்து இடமாக எழுதப்பட்டிருக்கும். இதை படிப்பவருக்கு ஒரு கண்ணாடி கட்டாயம் அவசியம். இதை ஆராய்ச்சி ரகசியத்துக்காக அவர் இவ்வாறு இதை எழுதியிருக்கலாம் என பலர் கருதுகின்றனர். ஆனால் உண்மையில் இதுதான் அவருடைய ஸ்டைல்.
ரூ.251 கோடிக்கு விற்பனையான கார்பெட்
மிகுந்த கலை வேலைப்பாடுகளுடன் கடந்த 17 ஆம் நூற்றாண்டு உருவாக்கப்பட்ட கிளார்க் சிக்கில் லீப் கார்பெட் என்று பெயரிடப்பட்ட அந்த கார்பெட் நியூயார்க்கில் நடைபெற்ற ஏலத்தில் 33 மில்லியன் டாலருக்கு அதாவது 251 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. வாஷிங்டனில் உள்ள கார்கோரன் ஆர்ட் கேலரியால் இந்த காா்பெட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. வெறும் தொலைபேசி மூலமாகவே அடையாளம் தெரிவித்துக் கொள்ள விரும்பாத வாடிக்கையாளர் ஒருவர் இதை இத்தனை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளார்.
ரூ.268 கோடிக்கு விற்பனையான அரசியின் ஆபரணம்
பிரான்ஸ் நாட்டின் அரசரான கிங் 16 ஆம் லூயி. இவரது மனைவி மேரி அண்டோய்நெட்டி. இவர் கழுத்தில் அணிந்திருந்த பென்டன்ட் என்ற ஆபரணம் தான் கடந்த 2018 இல் நடைபெற்ற ஏலத்தின் போது ரூ.268 கோடிக்கு அதாவது 36 மில்லியன் டாலருக்கு விற்பனையானது. ஒரு பெடன்டன் இத்தனை அதிக விலைக்கு விற்பனையானது இதுதான் முதன் முறையாகும்.
ரூ.273 கோடிக்கு விற்பனையான பேட்மின்டன் கேபினட்
இதை யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. உலகிலேயே பேட்மின்டன் கேபினட் அதிக விலைக்கு விற்பனையாகும் என யாராவது எதிர்பார்த்திருப்பார்களா.. ஆனால் அதுதான் உண்மை. 30 வகையான கலை வேலைப்பாடுகளுடன் மரத்தால் செய்யப்பட்ட இந்த கேபினட்டை உருவாக்க சுமார் 6 ஆண்டுகள் பிடித்தன. இது இத்தாலியில் தயாரிக்கப்பட்டு தற்போது வியன்னாவில் உள்ள Liechtenstein Museum இல் உள்ளது. இந்த மியூசியத்தின் இயக்குநரான டாக்டர் ஜோகன் கிரேஃப்னெருக்குத்தான் ரூ.273 கோடிக்கு அதாவது 36.6 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.
ரூ.330 கோடிக்கு விற்பனையாகி அசத்திய ஓவியம்
மீண்டும் நாம் ஓவியத்துக்குத் தான் வரவேண்டியுள்ளது. இதன் மூலம் உலகிலேயே ஓவியங்கள் தான் அதிக மதிப்புடையவையாக கருதப்படுவது மிகுந்த ஆச்சரியமளிக்கக் கூடிய ஒன்றுதான். பெண் ஓவியரான ஜியோர்ஜியா ஓ கீபே என்பவர் வரைந்த வெள்ளை மலர் என்ற பெயரிடப்பட்ட ஓவியமம்தான் கடந்த 2014 இல் நியூயார்க்கில் நடைபெற்ற ஏலத்தில் 44 மில்லியன் டாலர் அதாவது ரூ.330 கோடிக்கு விற்பனையானது.
ரூ.357 கோடிக்கு விற்பனையான கார்
Ferrari 250 GTO Berlinetta என்ற கார் பழம்பெருமை வாய்ந்த காராக கருதப்படுகிறது. இந்த கார் 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தயாரிக்கப்பட்டது. இந்த கார் அதே ஆண்டில் இத்தாலியில் நடைபெற்ற போட்டியில் சாம்பியன் பட்டத்தையும் வென்றது. இந்த மாடல் வெறும் 36 எண்ணிக்கைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. கார் ஆர்வலர்களிடம் இந்த காருக்கு அளவில்லாத மதிப்பு உள்ளது. 2021 ஆண் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில்தான் 48.4 மில்லியன் டாலர் அதாவது ரூ.357 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
ரூ.428 கோடி ரூபாய்க்கு விற்பனையான நீல வைரக் கல்
உலகில் எத்தனையோ வைரங்கள் இருந்தாலும் ஒரு சில வைரங்கள் மட்டும் அரிதானவையாக கருதப்படுகின்றன. அப்படி ஒன்றுதான் நீல நிற வைரக்கல். இதன் எடை 14.62 கேரட் எடை கொண்டதாகும். ஆபரண விற்பனையிலேயே முன் எப்போதும் இல்லாத வகையில் அதிக விலைக்கு விற்பனையானதாக இந்த நீல வைரம் மிளிர்கிறது. இந்த வைரத்துக்கு அதன் முந்தைய உரிமையாளரான சர் பிலிப் ஓப்பன்ஹைமர் என பெயரிடப்பட்டது. அவரது குடும்பம் பல ஆண்டுகளாக மிகவும் பிரபலமான டி பீர்ஸ் என்ற வைர நிறுவனத்தை நடத்தி வந்தது. 2016 இல் ஜெனீவாவில் நடைபெற்றர ஏலத்தின் போதுதான் இந்த நீல நிற வைரம் 57.5 மில்லியன் டாலர் அதாவது 428 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.
ரூ.672 கோடிக்கு விற்பனையான மற்றொரு ஓவியம்
பிரிட்டனைச் சேர்ந்த ஓவியர் டேவிட் ஹாக்னே என்பவர் தீட்டிய ஓவியம் நீச்சல் குளத்தில் இருவர் என்ற ஓவியம். கடந்த 2018 இல் நியூயார்க்கில் நடைபெற்ற ஏலத்தில் இந்த ஓவியம் ரூ.672 கோடிக்கு அதாவது 90.3 மில்லியன் டாலருக்கு விற்பனையாகி சாதனை படைத்தது.
ரூ.678 கோடிக்கு விற்பனையான பிளாஸ்டிக் சிற்பம்
பார்க்க சாதாரண பிளாஸ்டிக் பொம்மை போல காட்சியளிக்கும் இதற்கா இவ்வளவு தொகை என்று வாயை பிளக்கத் தோன்றுகிறது அல்லவா. இதை உருவாக்கிய அமெரிக்க பிளாஸ்டிக் சிற்பி ஜெப் கூன்ஸ் கடந்த 2019 இல் இதை 91.1 மில்லியன் டாலருக்கு அதாவது இந்திய மதிப்பில் ரூ.678 கோடிக்கு விற்பனை செய்தார். இதை வாங்கியவர் யார் என்பதை வெளியிட்டுக் கொள்ள ஏல நிறுவனம் விரும்பவில்லை.
ரூ.1050 கோடிக்கு விற்பனையான சிற்பம்
சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர் ஜியாகோமெட்டி என்பவர் உருவாக்கிய சிற்பம் பாயின்டிங் மேன் என்பதாகும். ஒரு ஒல்லியான மனிதனை சித்தரிப்பதை போன்ற ஒரு ஆள் சைஸ் உள்ள நவீன சிற்பமாகும். இந்த சிற்பம் நியூயார்க்கில் 2017 இல் நடைபெற்ற ஏலத்தில் ரூ.141 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.1050 கோடிக்கு விற்பனையானது. இங்குதான் பல்வேறு பிரபல கலைப் பொருள்கள் அதிக விற்பனைக்கு விற்பனையாகி சாதனை படைத்து வருகின்றன. இந்த சிற்பத்தை வரை மேலும் ஒரு சிறப்பு அம்சம் என்ன தெரியுமா.. ஒரே இரவில் இந்த சிற்பத்தை அந்த சுவிஸ் சிற்பி செய்தார் என்றால் ஆச்சரியம் தானே.
ரூ.1250 கோடிக்கு விற்பனையான சொகுசு கப்பல்
ரஷ்யாவைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் ரோமன் அப்ராமோவிச் என்பவர் வாங்கிய சொகுசு கப்பல்தான் மிகவும் காஸ்ட்லியான கப்பல். சுமார் 405 அடி நீளம் கொண்ட இந்த கப்பலை கப்பல் பொறியாளர் பிராங்க் முல்டெர் என்பவர் வடிவமைத்துள்ளார். ஆன்லைனில் நடைபெற்ற ஏலத்தில் இந்த கப்பலை ரூ.1250 கோடிக்கு இவர் வாங்கினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
ரூ.1380 கோடிக்கு விற்பனையான ஓவியம்
இதற்கு அடுத்தபடியாக அதிக விலைக்கு விற்பனையான பொருளும் ஒரு ஓவியம் தான். பாப்லோ பிகாசோ என்ற ஓவியரை கேள்விப்பட்டிருப்பீர்கள். இன்றைக்கும் புரியாத மாதிரி ஓவியம் வரைந்தால், என்ன பிகாசோ என்று நினைப்பா என கேலி செய்வதுண்டு. ஆனால் உலகிலேயே இன்றைக்கு அதிக விலைக்கு விற்கப்பட்ட பொருளில் முன்னணியில் அவரது லெஸ் பெம்மெஸ் டி அல்கெர் என்ற ஓவியம் உள்ளது. அதே நியூயார்க்கில் 2015 இல் நடைபெற்ற ஏலத்தில் இந்த ஓவியம் 179 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1380 கோடி ரூபாய்க்கு விற்பனையானது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்த சாதனையை முறியடித்துதான் லியோனார்டோ டாவின்சி 2017ல் முறியடித்து சாதனை படைத்தது.
ரூ.3480 கோடிக்கு விற்பனையான ஓவியம்
உலக புகழ் பெற்ற ஓவியர் லியோனார்டோ டாவின்சி. இது வரை விற்பனையான பொருள்களிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட பொருள் இவர் வரைந்த சல்வடால் முன்டி என்ற பெயர் கொண்ட ஓவியம் தான். கடந்த 2017 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற ஏலத்தின் போது இந்த ஓவியத்தை சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் 450 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.348 கோடிக்கு வாங்கினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.